செய்திகள் :

கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீர் திறப்பு! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

post image

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 3,126 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி அணையின் மொத்த நீர்மட்டம் 52 அடி மற்றும் மொத்த கொள்ளளவு 1,666.29 மில்லியன் கன அடி ஆகும். இன்றைய நிலவரப்படி அணையின் தற்போதைய கொள்ளளவு 1415.90 மில்லியன் கன அடியாகவும் அணையின் நீர்மட்டம் 49.75 அடியாகவும் உள்ளது. அணையின் நீர்வரத்து வினாடிக்கு 3,126 கன அடியாக உள்ளது.

அணையின் பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து வினாடிக்கு 3,126 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையிலிருந்து கூடுதலாக நீர் வெளியேற்றப்படுவதால் கிருஷ்ணகிரி அணையில் இருந்து சாத்தனூர் அணை வரையில் அதாவது கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எனவே, தாழ்வான மற்றும் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், தென்பெண்ணை ஆற்றில் குளிக்கவோ கால்நடைகளை கொண்டு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

water released from Krishnagiri Dam Flood warning for 3 districts

சென்னையில் தொடங்கியது மழை.. எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் பதில்

சென்னையில் கடந்த ஒரு சில நாள்களாகவே பலத்த மழை பகலிலும், இரவிலும் வெளுத்து வாங்கி வரும் நிலையில் அதுபோன்று இப்போது தொடங்கிய மழை இருக்காது என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.சென்னை மற்றும் அதன் சுற்றவட்டா... மேலும் பார்க்க

விஜய் நாளை மீண்டும் பிரசாரம்- தொண்டர்களுக்கு தவெக முக்கிய அறிவுறுத்தல்

நாகப்பட்டினத்தில் தவெக தலைவர் விஜய் நாளை மீண்டும் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் தொண்டர்களுக்கு கட்சித் தலைமை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில், நம் வெற்றித் தலைவர் விஜய், தமிழகம் முழுவது... மேலும் பார்க்க

விஜய்யின் ஜனநாயகன் அப்டேட்! ரசிகர்களுக்கு விருந்து!

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம், ரசிகர்களுக்கு பெரிதும் விருந்தளிக்கும் என்று இயக்குநர் எச்.வினோத் தெரிவித்துள்ளார்.நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடித்துவரும் ஜனநாயகன், அவரின் கடைசிப் படம் என்பதால், ரச... மேலும் பார்க்க

வேலூர் காவலர் பயிற்சிப் பள்ளிக்கு வேலுநாச்சியாரின் பெயர்! - முதல்வர் அறிவிப்பு

வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக ... மேலும் பார்க்க

நாகையில் விஜய் பரப்புரை: காவல்துறை நிபந்தனைகளும் கட்சி நிர்வாகியின் மனுவும்!

நாகப்பட்டினத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ளவுள்ள பரப்புரைக்கு காவல்துறை சில நிபந்தனைகளை விதித்துள்ளனர்.நாகப்பட்டினம் மாவட்டம், புத்தூர் ரவுண்டானா பகுதியில் சனிக்கிழமை (செப். 20) காலை 11 மணியளவில் நட... மேலும் பார்க்க

திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.செப். 19 தமிழகத்தில் ஒருசில இடங்களில... மேலும் பார்க்க