செய்திகள் :

'கிளர்க் பணிக்கு ரூ.3 லட்சம்' - அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி; கல்லூரி பேராசிரியர் இடை நீக்கம்

post image

திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அரசுப் பேருந்து நடத்துநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் பழைய வத்தலகுண்டைச் சேர்ந்த தனபால் என்பவரின் மனைவி ராஜேஸ்வரிக்கு திண்டுக்கல் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பிய தனபால், இடைத் தரகர் செல்வராஜுடன் சென்று திண்டுக்கல் MVM அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த சியாமளாதேவியை அணுகியுள்ளார். பேராசிரியர் சியாமளாதேவி, ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணிக்கு ரூ.5 லட்சம் என்றும், கிளர்க் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ.3 லட்சம் என்றும் கூறியுள்ளார்.

arrest
arrest

முன்பணமாக ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கேட்டுள்ளார். இதையடுத்து, இடைத் தரகர் செல்வராஜ் கடந்த 2023-ஆம் ஆண்டு ராஜேஸ்வரி, காயத்ரி, நந்தினி, மாலினி, ரேவதி, செல்வராணி, லிங்கேஸ்வரன் என ஏழு பேரிடம் அரசுக் கல்லூரி பணிக்காக ரூ.28 லட்சம் முன்பணமாக வாங்கி சியாமளாதேவியிடம் கொடுத்துள்ளார்.

இதற்கிடையில், அரசுக் கலைக் கல்லூரிக்கு ராஜேஸ்வரி, நந்தினி, காயத்ரி ஆகியோரைத் தனித்தனியாக அழைத்து, இவரே போலி நேர்காணலையும் நடத்தியுள்ளார். லிங்கேஸ்வரனுக்கு சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் நேர்காணல் நடக்க உள்ளதாகக் கூறி, அரசு முத்திரையுடன் கூடிய கடிதத்தைத் தயாரித்து, அதில் போலியாக ஆணையர் கையெழுத்திட்டு அனுப்பியுள்ளார்.

எல்லாம் முடிந்து 2 வருடம் ஆகியும் வேலை குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. சந்தேகம் அடைந்த பணம் கொடுத்தவர்கள் சியாமளா தேவியிடம் கொடுத்த பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் சியாமளாதேவி சரியான பதில் அளிக்காமல் பணம் கொடுத்தவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வெளி நபர்கள் மூலம் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. பிரதீப்பிடம் பாதிக்கபட்டவர்கள் புகார் அளித்தனர். இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு DSP குமரேசன் தலைமையிலான போலீசார் சியாமளாதேவிக்கு விசாரணைக்கு வருமாறு 3 முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை.

Fraud Alert
Fraud Alert

இதனைத் தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து சியாமளாதேவியைக் கைது செய்து நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

சியாமளாதேவி ரெட்டியார்சத்திரம் அரசு கலைக் கல்லூரியில் வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

சட்டக் கல்லூரிக்குள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி - கொல்கத்தாவில் மீண்டும் அதிர்ச்சி

கொல்கத்தாவில் ஏற்கனவே கடந்த ஆண்டு ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் மேற்கு வங்க அரசியல் மட்டுமல்லாது நாடு முழுவ... மேலும் பார்க்க

தெலங்கானா: 'ரூ.500 முதல் ரூ.2000 வரை கட்டணம்' - தங்களுடைய ஆபாச வீடியோக்களை இணையத்தில் விற்ற தம்பதி

தெலங்கானாவில் வீட்டிலிருந்தபடி சட்டவிரோதமாக ஆபாசப் படங்களை உருவாக்கி, அதற்காக பணம் பெற்ற தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐதராபாத்தில் உள்ள ஆம்பர்பேட்டையில் வீட்டிலிருந்தே தம்பதிகள் ஆபாசப் படங்களை... மேலும் பார்க்க

சென்னை ஐஐடியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை?; துணிச்சலுடன் போராடியதால் தப்பித்தார் - நடந்தது என்ன?

சென்னை ஐஐடி-யில் 20 வயதான இளம்பெண் ஒருவர் Internship-க்கு வந்திருக்கிறார். இதற்காக அவர் ஐஐடி வளாகத்திலேயே தங்கியிருக்கிறார். கடந்த 25.6.2025-ம் தேதி இரவில் ஐஐடி வளாகத்தில் அவர் தனியாக நடந்துச் சென்றார... மேலும் பார்க்க

3-வது மனைவியைக் கொன்று 23 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை.. 75 வயது முதியவர் சிக்கியது எப்படி?

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் தனது மூன்றாவது மனைவியைக் கொன்றுவிட்டு 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 75 வயது முதியவரை போலீஸார் தற்போது கைது செய்திருக்கின்றனர்.போலீஸாரின் கூற்றின்படி, ஹனுமந்தப்பா எ... மேலும் பார்க்க

திருப்பூர்: 'இன்ஸ்டாகிராம் லின்க்கால் ரூ.22 லட்சம் போச்சு' - பறிகொடுத்த இளைஞர்; எச்சரிக்கும் போலீஸ்

திருப்பூரைச் சேர்ந்தவர் முனிவேலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பங்குச்சந்தை முதலீடு தொடர்பான விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அதற்குள் சென்ற முனிவேல், அதில் இணைக்கப்பட்ட வாட்ஸ் ஆஃப் லிங்க் மூலம் குழுவில் இணைந... மேலும் பார்க்க

மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு - சென்னை சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை!

'இரு மதங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவலை பரப்பியதாக' மதுரை ஆதீனம் மீது சென்னை கிழக்கு மண்டல சைஃபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள... மேலும் பார்க்க