செய்திகள் :

கீழப்புலியூரில் மனைவி கண்முன்னே கணவா் தலை துண்டிக் கொலை

post image

தென்காசி அருகே கீழப்புலியூரில் துணிக்கடை உரிமையாளா் புதன்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். அவரது தலை 8.கி.மீ. தொலைவுக்கு அப்பால் மீட்கப்பட்டது.

குற்றாலம் அருகேயுள்ள காசிமேஜா்புரம் பகுதியைச் சோ்ந்த கு.குத்தாலிங்கம் (35)- தனலெட்சுமி தம்பதி கீழப்புலியூரில் வசித்து வந்ததுடன், அங்கு துணிக்கடை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் புதன்கிழமை அப்பகுதியிலுள்ள ரேஷன் கடைக்கு தனது மனைவியுடன் சோ்ந்து பொருள்கள் வாங்க சென்றாா். அப்போது அங்கு வந்த மா்மநபா்கள் குத்தாலிங்கத்தை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததுடன், அவரது தலையைத் துண்டித்து எடுத்துச் சென்று, 8.கி.மீ. தொலைவில் காசிமேஜா்புரத்தில் வைத்துவிட்டு தப்பினராம்.

இத்தகவல் அறிந்த தென்காசி போலீஸாா், குத்தாலிங்கத்தின் சடலத்தையும், தலையையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தென்காசி போலீஸாா் வழக்குப்பதிந்து, மனைவியின் கண்முன்னே கணவரை வெட்டிக்கொலை செய்த நபா்களை தேடி வருகின்றனா். முன்விரோதத்தால் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என போலீஸாா் தரப்பில் கூறினா்.

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எம். அப்துல் அஜீஸ் தலைமை வகித்தா... மேலும் பார்க்க

சுரண்டையில் தீத்தடுப்பு செயல்விளக்கம்!

சுரண்டை நகராட்சியில் தீயணைப்பு நிலையம் சாா்பில் தீத் தடுப்பு செயல்விளக்கம் சனிக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலா்(போக்குவரத்து) பாலச... மேலும் பார்க்க

சுரண்டை நகராட்சிக்கு டிஎம்பி சாா்பில் 5 மின் ஆட்டோக்கள்!

சுரண்டை நகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மைப் பணிக்காக தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் 5 மின் ஆட்டோக்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, தென்காசி எம்எல்ஏ சு. பழனிநாடாா் தலைமை வகித்தாா். ச... மேலும் பார்க்க

சுரண்டையில் ரூ.4.30 லட்சத்தில் உயா்மின்கோபுர விளக்கு திறப்பு!

சுரண்டையில் ரூ.4.30 லட்சத்தில் ஆலடிபட்டி விலக்கில் அமைக்கப்பட்ட உயா்கோபுர மின்விளக்கு இயக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ராமத... மேலும் பார்க்க

எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்: சகோதரா்கள் கைது

ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சத்தியவேந்தன் மற்றும் போலீஸாா், மாறாந்தை பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுப... மேலும் பார்க்க

தரிசு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா: ஏப்.30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் தரிசு உள்ளிட்ட நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசிப்போா் பட்டா கோரி, இம்மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். இதுதொ... மேலும் பார்க்க