செய்திகள் :

குஜராத்தில் 461 ஆக உயர்ந்த கரோனா பாதிப்பு!

post image

குஜராத்தில் ஒரே நாளில் 64 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 461 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், நாளுக்குநாள் பாதிப்பும் அதிகரித்து வருகின்றன. அதிலும் தில்லி, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கத்தில் திடீரென கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு 64 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 461 ஆக உயர்ந்துள்ளதையடுத்து 20 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரத்தில் 441 பேர் வீடுகளில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

அகமதாபாத்தில் அதிகபட்சமாக 241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு 76 ஆக இருந்த பாதிப்பு, தற்போது நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை 37 வயது பெண் ஒருவர் அசர்வா சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் 2 ஆண்கள், ஒரு பெண் மற்றும் எட்டு மாத பெண் குழந்தை உள்பட நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 36 பேர் சிகிச்சை பெற்றுக் குணமடைந்துள்ளனர்.

கரோனா பாதிப்பு கேரளத்தில் (1,416), மகாராஷ்டிரம் (494) முறையே குஜராத் மூன்றாவது இடத்தில் உள்ளன. அதைத் தொடர்ந்து தில்லி (393) மற்றும் மேற்கு வங்கம் (372) ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக அகமதாபாத் போன்ற நகர்ப்புற மையங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலம் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது மற்றும் உள்ளூர் சுகாதார கண்காணிப்புக் குழுக்கள் மூலம் கண்காணித்து வருகிறது.

மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற்ற பய... மேலும் பார்க்க

2 மாநிலங்களால் தேடப்பட்ட நக்சல் தலைவர் சத்தீஸ்கரில் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் மூத்த தலைவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பிஜப்பூர் மாவட்டத்தின் இந்திரவதி தேசியப் பூங்காவில், கடந்த ஜூன் 4 ஆம் தேதி முதல் சிறப்பு அதிரடி படை,... மேலும் பார்க்க

கரோனா பரவல்: ஒடிசாவில் புதியதாக 7 பேருக்கு பாதிப்பு!

ஒடிசா மாநிலத்தில் புதியதாக 7 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், ஒடிசா மாந... மேலும் பார்க்க

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ‘ஸ்டார் லிங்க்’ சேவை! உரிமம் வழங்கியது மத்திய அரசு!

டெஸ்லா நிறுவனரும் அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க்கின், செயற்கைக் கோள் இணைய சேவை வழங்கும் ‘ஸ்டார் லிங்க்’ நிறுவனத்துக்கு மத்திய அரசின் தொலைத் தொடர்புத்... மேலும் பார்க்க

ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு! பிரதமர் மோடியே வெளியிட்ட தகவல்

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பு, இந்த நாடுகளிடையேயான ... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை குறிவைத்து வந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து தில்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.காஜியாபாத் காவல் உதவி ஆணையர் ரித்தேஷ் திரிபாதி கூறுகையில், ஜூன் 5ஆம் தேதி... மேலும் பார்க்க