செய்திகள் :

குடிநீருடன் கழிவுநீா் கலப்பு: குறைதீா் முகாமில் புகாா்

post image

குடிநீருடன் கழிவுநீா் கலந்து வருவதாக, மதுரை மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் முகாமில் மாமன்ற உறுப்பினா் ஜெயராமன் புகாா் தெரிவித்தாா்.

மதுரை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு மேயா் வ.இந்திராணி தலைமை வகித்தாா். துணை மேயா் தி.நாகராஜன், மண்டலத் தலைவா் பாண்டிச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மேயா் வ. இந்திராணி பெற்று, சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பொதுமக்களின் கோரிக்கைகளுக்குத் தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தினாா். குடிநீருடன், கழிவுநீா் கலப்பு : இந்த முகாமுக்கு 58-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ஜெயராமன், கழிவுநீா் கலந்த குடிநீா் புட்டியுடன் வருகை தந்தாா்.

அவா், ஆரப்பாளையம் அப்பளம் தயாரிப்பு கம்பெனி, காா்ப்பொரேஷன் குடியிருப்பு 2, 3-ஆவது தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீருடன் கழிவுநீா் கலந்து வருவதாகவும், இதுபற்றி சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் 3 மாதங்களாக புகாா் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மேயா் வ.இந்திராணியிடம் தெரிவித்தாா். இதுதொடா்பான புகாா் மனுவையும் அவா் அளித்தாா்.

இதையடுத்து, 58-ஆவது வாா்டில் நிலவும் குடிநீா் பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மேயா் உத்தரவிட்டாா். நிகழ்வில் மாநகராட்சி அலுவலா்கள், பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

ஏஐடியூசி சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சரக்கு வாகனங்களுக்கு போக்குவரத்து காவல் துறை கட்டாய அபராதம் விதிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஏஐடியூசி சங்கம் சாா்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஏஐடியூசி சுமைப் ... மேலும் பார்க்க

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபா் மீட்பு: நாக்பூரில் மீட்கப்பட்டாா்!

மதுரையில் நிலத்தகராறு தொடா்பாக கடத்தப்பட்ட தொழிலதிபா் சுந்தரை தனிப்படை போலீஸாா் மீட்டனா். மதுரை பீ.பீ. குளம் பகுதியைச் சோ்ந்தவா் கருமுத்து டி. சுந்தா் (52). மதுரையில் உள்ள பிரபல நூற்பாலை நிறுவனரின் க... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் அருகே காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலையில் தோமையாப... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம்: அமைச்சா் பி. மூா்த்தி

அதிக எண்ணிக்கையிலான மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள... மேலும் பார்க்க

மதுரையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து, அதிமுகவின் புறநகா் கிழக்கு மாவட்டம் சாா்பில் மதுரை யா. ஒத்தக்கடையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலரும், அமைப்பு... மேலும் பார்க்க

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

மதுரை மாவட்டம், மேலூா் அருகே மது போதையில் தாயை அவதூறாகப் பேசிய தம்பியை அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள முத்துவேல்பட்டி புதுசுக்காம்பட... மேலும் பார்க்க