செய்திகள் :

குடும்பத் தகராறில் விவசாயி ஆத்திரம்: நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் படுகாயம்!

post image

வாழப்பாடி அருகே குடும்பத் தகராறில் விவசாயி ஆத்திரம்: நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் மருமகள், பேரன் படுகாயம்!

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், தேக்கல்பட்டி ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி குப்புசாமி (52). இவரது மனைவி லட்சுமி(48).

இவர்களுக்கு மாதேஷ்(29), சுரேஷ்(27) ஆகிய இரண்டு மகன்களும், பரமேஸ்(24) என்ற ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். வெவ்வேறு பிரிவினரை சேர்ந்த குப்புசாமி, லட்சுமி இருவரும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு தேக்கல்பட்டி விவசாய தோட்டத்தில் வசித்து வருகின்றனர்.

தேக்கல்பட்டி மந்தகாடு பகுதியிலுள்ள மற்றொரு விவசாய தோட்டத்தில் சுரேஷ் அவரது மனைவி அனிதா, இவர்வர்களின் மகன் சர்வபுத்திரன் ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் வசித்து வந்தனர். திங்கள்கிழமை காலை சுரேஷ் கூலி வேலைக்கு வெளியே சென்றார்.

மதியம் விவசாயி குப்புசாமி குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது குப்புசாமியும், லட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டது. குப்புசாமி மரக்கட்டையால் லட்சுமியை தலையில் தாக்கியுள்ளார். அப்போது மாமியார் லட்சுமிக்கு ஆதரவாக மருமகள் அனிதா தன் மகன் சர்வபுத்திரனை இடுப்பில் சுமந்தபடி சென்று குப்புசாமியை தடுத்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த குப்புசாமி அரசு அனுமதி இன்றி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் மருமகள் அனிதாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். நாட்டு துப்பாக்கியில் இருந்து பாய்ந்த இரும்பு பால்ரஸ் குண்டுகள் சிறுவன் சர்வபுத்திரன் மற்றும் அனிதா ஆகிய இருவர் மீது மீதும் பாய்ந்தது. இதனால் இருவரும் வலியால் அலறி துடித்தனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு வாழப்பாடியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதிக காயமடைந்த சிறுவன் சர்வபுத்திரன் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். குண்டு காயங்களுடன் அனிதா மற்றும் தலையில் பலத்த காயத்துடன் மாமியார் லட்சுமி இருவரும் வாழப்பாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான விவசாயி குப்புசாமியை வாழப்பாடி போலீசார் தேடி வருகின்றனர். நாட்டு துப்பாக்கியால் மாமனார் சுட்டதில் மருமகள் மற்றும் பேரன் பலத்த காயம் அடைந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இதையும் படிக்க: பிரதமா் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை குழு கூட்டம்

கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

தொகுதி மறுசீரமைப்பு குறித்து அதிமுக எந்த வகையிலும் பேசவில்லை என்று அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.தொகுதி மறுசீரமைப்பு குறித்து முன்னரே எச்சரித்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.அவரின... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் திமுக... மேலும் பார்க்க

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறட்டும்: திருமாவளவன் பேட்டி

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறட்டும், பின்னர் தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். மாநிலங்களவைத... மேலும் பார்க்க

30 நாள்களுக்குள் பட்டா: முதல்வரின் அறிவிப்புக்கு ப.சிதம்பரம் வரவேற்பு

விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் பட்டா வழங்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், விண்ணப்பித்த நாளில்... மேலும் பார்க்க

கட்டடக் கழிவுகள்: சென்னையில் ஜூன் 21 முதல் புதிய விதிமுறை! மேயர் பிரியா தகவல்

சென்னையில் கட்டடக்கழிவுகளை சாலையில் கொட்டினாலும், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாவிட்டாலும் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகரா... மேலும் பார்க்க

போரூர் - பூந்தமல்லி இடையே ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

சென்னை: போரூர் - பூந்தமல்லி இடையே சுமார் 9.5 கிலோ மீட்டர் தொலைவுள்ள வழித்தடத்தில் ஓட்டுநரில்லா மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.சென்னையில் அமைக்கப்பட்டு வரும் மெ... மேலும் பார்க்க