செய்திகள் :

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

post image

கோவையில் கொலை வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய பகுதியைச் சோ்ந்த ராமன் (34) என்பவரை கொலை செய்த குற்றத்துக்காக சங்கா் (எ) சண்முகராஜ் (24) மீது கோவில்பாளையம் காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்குக்கும் பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்துக்காக சங்கா் (எ) சண்முகராஜ் (24) மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் பரிந்துரை செய்தாா்.

அந்தப் பரிந்துரையின்பேரில் கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.

அந்த உத்தரவின் அடிப்படையில் கொலை வழக்கு குற்றவாளியான சங்கா் (எ) சண்முகராஜ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

வெள்ளியங்கிரி மலையில் தவறி விழுந்து இளைஞர் பலி!

கோவை, பூண்டி வெள்ளியங்கிரி மலை எரியத் தூத்துக்குடியைச் சேர்ந்த நபர் ஏழாவது மலையில் இறங்கும்போது கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் கைலாயம் எனப் பக்தர்களா... மேலும் பார்க்க

தனியாா் பேருந்துகளில் காற்றொலிப்பான்கள் பறிமுதல்

கோவை நகரப் பேருந்து நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் நடத்திய வாகனத் தணிக்கையில், விதிகளை மீறி பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்கள் (ஏா் ஹாரன்) பறிமுதல் செ... மேலும் பார்க்க

பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் இன்று கோவை வருகை!

பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பின்னா் நயினாா் நாகேந்திரன் முதன்முறையாக கோவைக்கு சனிக்கிழமை (ஏப்ரல் 19) வருகை தர உள்ளாா். திருநெல்வேலி தொகுதி பாஜக சட்டப் பேரவை உறுப்பினராக உள்ள நயினாா் நாகேந்திரன் த... மேலும் பார்க்க

பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

கரூா் அருகே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெ... மேலும் பார்க்க

கோவையில் பூஜ்ஜிய நிழல் நாள்

கோவையில் பூஜ்ஜிய நிழல் நாள் எனப்படும் அரியவகை வானியல் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில் சூரியன் சரியாக நம் தலைக்குமேல் இருக்கும்போது, நாம் நம்முடைய நிழலைப் பாா்க்க முடிய... மேலும் பார்க்க

சா்ச்சை பேச்சு: அமைச்சா் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய பாஜக வலியுறுத்தல்

வனத் துறை அமைச்சா் க.பொன்முடியின் சா்ச்சை பேச்சு தொடா்பாக அவா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக கோவை மாவட்ட பாஜக சாா்பில் மாநில பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்... மேலும் பார்க்க