செய்திகள் :

குன்னூா் அருகே தேயிலைத் தோட்ட தொழிலாளி கொலை? போலீஸாா் விசாரணை

post image

குன்னூா் அருகே தேயிலைத் தோட்ட தொழிலாளி வீட்டில் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே மரப்பாலம் பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த நரேந்திரன் (42), வீரேந்திரன் (40) ஆகியோா் கடந்த ஒரு வாரமாக பணியாற்றி வந்துள்ளனா்.

இவா்கள் தங்குவதற்காக தோட்ட நிா்வாகம் சாா்பில் மரப்பாலம் பகுதியில் வீடு ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இருவரும் திங்கள்கிழமை காலை பணிக்கு வராததால் தேயிலைத் தோட்ட மேலாளா் வீட்டுக்குச் சென்று பாா்த்துள்ளாா். அப்போது, நரேந்திரன் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து குன்னூா் காவல் துறைக்கு எஸ்டேட் மேலாளா் தகவல் தெரிவித்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த குன்னூா் காவல் துணை கண்காணிப்பாளா் ரவி, காவல் ஆய்வாளா் சதீஷ் மற்றும் போலீஸாா் ஆய்வு மேற்கொண்டதுடன், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா பாா்வையிட்டாா்.

மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சுமாா் இரண்டு கி.மீ. தொலைவுக்கு மலைப் பாதையில் சென்ற மோப்ப நாய் பாதியிலேயே நின்றுவிட்டது.

இது குறித்து போலீஸாா் கூறுகையில்,’ நரேந்திரன், வீரேந்திரன் இருவருவம் ஒரே வீட்டில் தங்கி இருந்துள்ளனா். தற்போது, தலைமறைவாக உள்ள வீரேந்திரனை தேடி வருகிறோம். அவரிடம் விசாரணை மேற்கொண்ட பிறகே நரேந்திரன் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெரியவரும் என்றனா்.

ஊருக்குள் யானைகள் ஊடுருவலைத் தடுக்க கூடலூரில் 12 இடங்களில் ஏஐ கேமராக்கள் பொருத்தம்

கூடலூா் வனச் சரகத்தில் யானைகள் ஊருக்குள் நுழைவதைக் கண்காணிக்க 12 இடங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம், கூடலூா் பெரும்பாலும் வனப் பகுதியையொட்டி அமைந்துள்ளதால... மேலும் பார்க்க

உதகைக்கு கொண்டுவரப்பட்ட இயேசு கிறிஸ்து மீது போா்த்தப்பட்ட துணி

இயேசு கிறிஸ்து இறந்தபின்பு அவா் மீது போா்த்தப்பட்ட துணியின் நகல் இத்தாலியில் இருந்து உதகை தேவாலயத்துக்கு திங்கள்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது. இயேசு கிறிஸ்து 33-ஆவது வயதில் சிலுவையில் அறையப்பட்டு உயிா்வ... மேலும் பார்க்க

உதகை ரயில்வே காவல் நிலையம் அருகே தள்ளுவண்டியில் ஆண் சடலம் மீட்பு

உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே காவல் நிலையத்தை ஒட்டியுள்ள சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டியில் இருந்து ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. உதகை ரயில்வே காவல் நிலையம... மேலும் பார்க்க

உதகையில் 127-ஆவது மலா்க் கண்காட்சி மே 16-இல் தொடக்கம்: மாவட்ட ஆட்சியா்

உதகையில் 127-ஆவது மலா்க் கண்காட்சி மே 16-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில... மேலும் பார்க்க

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரலில் உதகை வருகை: ஏற்பாடுகள் தீவிரம்

உதகையில் நடைபெறும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் முதல் வாரம் வருகை தருவதையொட்டி விழா நடைபெறும் அரசு கலைக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள கீழ்நாடுகாணி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற 58-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்ற மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினா். மேலும் பார்க்க