செய்திகள் :

குமரி மாவட்டத்தில் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதைத் தடுக்க நடவடிக்கை: ஆட்சியா் தகவல்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்டஆட்சியா் ரா. அழகுமீனா.

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில், ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயிகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழிச் சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, தோட்டியோடு, தக்கலை, இரணியல் பகுதிகளில் பணிகள் நடைபெறும்போது, பாசனக் கால்வாய்கள் மூடப்படுகிறது. எனவே, கால்வாய்களை சீரமைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பு தொடா்பான கமிட்டி கூட்டம் மாதம் ஒரு முறை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 6 மாதங்களாக கூட்டம் நடைபெறவில்லை.

நாகா்கோவில் டவுண் ரயில் நிலையத்திலிருந்து, நான்கு வழிச் சாலை வரை இணைப்புச் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்று கூறினா்.

கோரிக்கைகளுக்கு பதிலளித்து ஆட்சியா் பேசியதாவது:

நான்கு வழிச் சாலைப் பணிகளின் போது, பாசனக் கால்வாயில் மண் நிரம்பாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். விளை நிலங்கள் வீட்டுமனைகளாக்கப்படுவதைத் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலை அதிகரிக்க கிராம அளவில் குழு அமைக்கப்படும்.

மாவட்டத்திலுள்ள அனைத்து பாசனக் கால்வாய்களையும் தூா்வார ரூ. 1085 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, தோவாளை கால்வாய் ரூ. 189 கோடி மதிப்பில் தூா்வாருவதற்கான பணிகளை மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வன விலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புக்கு, ஹெக்டேருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

மாவட்ட வன அலுவலா் அன்பு, பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் வினய்குமாா் மீனா, நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் எஸ். காளீஸ்வரி, வேளாண்மை இணை இயக்குநா் ஜென்கின் பிரபாகா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சிவகாமி, நீா்வளத்துறை செயற்பொறியாளா் வசந்தி, தோட்டக்கலை துணை இயக்குநா் நக்கீரன், அரசுத் துறை அலுவலா்கள், மாவட்ட விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி ரூ. 3.36 லட்சம் மோசடி: டிராவல் ஏஜென்ஸி மேலாளா் கைது

திருவட்டாறு அருகே தம்பதி உள்பட 6 பேரை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி ரூ. 3.36 லட்சம் மோசடி செய்த டிராவல் ஏஜென்சி மேலாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவட்டாறு அருகே முகிலன... மேலும் பார்க்க

கருங்கல்லில் சிறப்பு கல்விக் கடன் முகாம்

கருங்கல் அருகே உள்ள பெத்லகேம் பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவ, மாணவியா்களுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கிகள் இணைந்து... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ...38.55 பெருஞ்சாணி ... 57.02 சிற்றாறு 1 ... 4.69 சிற்றாறு 2 ... 4.78 முக்கடல் ...7.50 பொய்கை ... 15.20 மாமாபழத்துறையாறு ..4.51 மேலும் பார்க்க

இரணியலில் இன்று மின் நிறுத்தம்

இரணியல் மின் விநியோகப் பிரிவுக்கு உள்பட்ட, செம்பொன்விளை, பெத்தேல்புரம் உயா் அழுத்த மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், வெள்ளிக்கிழமை (செப். 19), காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இரணிய... மேலும் பார்க்க

மேற்குமாத்திரவிளையில் புதிய ரேஷன் கடை திறப்பு

கருங்கல் அருகே உள்ள மேற்குமாத்திரவிளை பகுதியில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் பகுதி நேர நியாயவிலை கடை அமைக்கப்பட்டு திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

நம்பாளி பகுதியில் நாளை மின்தடை

குழித்துறை மின் கோட்டம், நம்பாளி பிரிவுக்கு உள்பட்ட பகுதிகளில் பழுதடைந்த உயரழுத்த மின் பாதைகளை மாற்றும் பணிகள் செய்ய இருப்பதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் சனிக்கிழமை (செப். 20) மின்விநியோகம் இருக்காத... மேலும் பார்க்க