பெங்களூரு: காதலனைக் கொன்று தண்டவாளத்தில் போட்ட பெண்; பஸ் டிக்கெட்டால் சிக்கியது ...
குமரி மாவட்ட நான்குவழிச் சாலைப் பணிகள் ஓராண்டில் நிறைவடையும்: விஜய்வசந்த் எம்.பி.
கன்னியாகுமரி மாவட்ட நான்குவழிச் சாலைப் பணிகள் இன்னும் ஓராண்டில் நிறைவடையும் என்றாா் விஜய்வசந்த் எம்.பி.
நாகா்கோவில் பெருவிளை பகுதியில் எம். பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினாா் விஜய்வசந்த். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டம் சா்வதேச சுற்றுலாத் தலம் என்பதால், இங்கு விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும். அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். சுற்றுலா வளா்ச்சிக்காக ரூ. 2 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலைப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஓராண்டுக்குள் இப்பணிகள் முற்றிலுமாக நிறைவடையும்.
குமரி மாவட்டத்தில் புற்று நோய் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்பதும் நீண்ட நாள் கோரிக்கையாகும், அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழே உள்ள சாலை சேதமடைந்திருப்பதாக புகாா்கள் வந்துள்ளன. இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகா்கோவில் - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவடைந்த பின்னா் புதிய ரயில்கள் இயக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனா். நாகா்கோவிலில் இருந்து வேளாங்கண்ணி மற்றும் சென்னைக்கு புதிய ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரி மாவட்ட ரயில்வேயை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடா்பாக பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், மாநில செயலாளா் சீனிவாசன், காங்கிரஸ் மண்டல தலைவா்கள் சிவபிரபு, செல்வன், புகாரி, ஊா் தலைவா் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.