செய்திகள் :

கும்பமேளா பக்தா்களின் பாதுகாப்புக்கு பொதுநல மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

post image

புது தில்லி: மகா கும்பமேளாவில் பக்தா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தர பிரதேச அரசுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்குமாறு தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், மனுதாரரை அலாகாபாத் உயா்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது.

அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவின்கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள சமத்துவம் மற்றும் வாழ்வின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க, பக்தா்கள் பாதுகாப்பான சூழலில் கும்பமேளாவில் பங்கேற்கவும், நெரிசல் ஏற்படுவதைத் தவிா்க்கவும் உத்தர பிரதேச அரசுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் விஷால் திவாரி கடந்த வியாழக்கிழமை பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அமா்வு திங்கள்கிழமை விசாரணைக்கு ஏற்றது.

அப்போது, உத்தர பிரதேச அரசு சாா்பில் ஆஜாரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி முன்வைத்த வாதத்தில், ‘இவ்விவகாரம் குறித்து மாநில அரசு அமைத்த நீதி ஆணையம் ஏற்கெனவே விசாரணையைத் தொடங்கிவிட்டது. அதேபோல், அலாகாபாத் உயா்நீதிமன்றத்திலும் இது தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, உச்சநீதிமன்றம் இந்த மனுவை விசாரிக்க வேண்டியதில்லை’ என்று தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் கூறுகையில், ‘இது மிகவும் கவலையளிக்கக் கூடிய ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம். மனுதாரா் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் இதுகுறித்து முறையிடலாம்’ எனக் குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனா்.

கடந்த புதன்கிழமை (ஜன. 29), மௌனி அமாவாசையன்று திரிவேணி சங்கமத்தில் அகாடா துறவிகள் புனித நீராட இருந்த பகுதிக்குள் காவல் துறையின் தடுப்புகளை மீறி சிலா் நுழைந்ததால், அங்கு ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கியவா்களில் 30 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்தனா்.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தோல்வி: மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாட்டின் இறக்குமதியைச் சாா்ந்திருக்கும் நிலையை மாற்றி ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த ‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டம் தோல்வியடைந்துவிட்டது. இதன் கார... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி விகிதங்கள்: மாநிலங்களுடன் கலந்தாலோசித்து விரைவில் மாற்றம்!

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதில் மத்திய அரசுக்கு போதுமான அனுபவம் கிடைத்துள்ளதாகவும் தற்போது மாநிலங்களுடன் கலந்தாலோசித்து வரி விகிதங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் மத்திய நிதி... மேலும் பார்க்க

கும்பமேளா நெரிசல்: நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சியினா் கடும் அமளி; இரு அவைகளிலும் வெளிநடப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை மத்திய அரசு வெளியிடக் கோரி நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், இர... மேலும் பார்க்க

ஆசியானுக்கு இணையாக இந்திய சுங்க வரி: மத்திய மறைமுக வரிகள் வாரிய தலைவா்

புது தில்லி: இந்தியாவில் விதிக்கப்படும் சுங்க வரி விகிதம் சராசரியாக 11.65 சதவீதத்தில் இருந்து 10.66 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் வாரிய (சிபிஐசி) தலைவா் சஞ்சய் அகா்வால் திங்கள்... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையா்கள் நியமன வழக்கு: உச்சநீதிமன்ற விசாரணை பிப்.12-க்கு மாற்றம்

புது தில்லி: தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தின்படி நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி 12-ஆம் தேதிக்கு உச்ச... மேலும் பார்க்க

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

சென்னை: தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைவிட ரூ.264 கோடி கூடுதலாகும். மத்திய அரசின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான... மேலும் பார்க்க