செய்திகள் :

குரல்வளை புற்றுநோயின் ஆரம்ப நிலையை செய்யறிவு(ஏஐ) கண்டறியும்: ஆய்வில் தகவல்

post image

ஒருவரின் குரல் பதிவைக் கொண்டு குரல்வளை புற்றுநோய் ஆரம்ப நிலையை செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பம் கண்டறியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

செய்யறிவு அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(ஏஐ) யாரும் எதிர்பாராத அளவுக்கு அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. செய்யறிவால் வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும் பல தொழில் துறைகள் பாதிப்படையும் என்று சொல்லப்படுகிறது. மற்றொரு பக்கம் ஏஐ வளர்ச்சிக்கான ஆராய்ச்சிகளும் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் புற்றுநோயின் ஆரம்ப நிலையைக் கண்டறிவதில் செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அந்தவகையில் ஒருவரின் குரல் பதிவு, குரல் தொனி, அதன் தெளிவு ஆகியவற்றைக் கொண்டு அவருக்கு குரல்வளை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் இருக்கிறதா என்று ஏஐ கண்டறியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

'ஃபிரன்டியர்ஸ் இன் டிஜிட்டல் ஹெல்த்' இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

குரல் பதிவில் இருந்து குரல் மடிப்புகளில் அசாதாரணங்கள் அல்லது புண்களைக் கண்டறிவதற்கான ஏஐ மாதிரிகளை உருவாக்க இந்த ஆய்வு உதவும் என்றும் குரல் ஒலியில் உள்ள மாற்றங்கள், அசாதாரணங்கள், குரல்வளை புற்றுநோயின் ஆரம்ப நிலை அறிகுறிகளாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

ஏனெனில் தற்போதைய புற்றுநோய் கண்டறிதல் முறைகளான எண்டோஸ்கோபி, பயாப்ஸிகள் ஆகியவை புற்றுநோயை அருகில் உள்ள திசுக்களுக்கு பரப்பிவிடும்.

'ஃப்ரிட்ஜ்2ஏஐ வாய்ஸ்' தரவுத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட 306 பேரின் 12,500-க்கும் மேற்பட்ட குரல் பதிவுகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்ததில் குரல் பதிவில் இரைச்சல் விகிதம் மாறுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

அதாவது குரல் பதிவின் இரைச்சல் விகிதத்தின்அடிப்படையில் ஆரோக்கியமான குரல்வளை, புண்கள் அல்லது பிரச்னைகள் உள்ள குரல்வளை என வேறுபாடுகள் கண்டறியப்பட்டன.

அதிலும் குறிப்பாக ஆண்களின் குரல்வளைகளில் உள்ள வித்தியாசங்கள் எளிதாகக் கண்டறியப்பட்டுள்ளன. அதேநேரத்தில் பெண்களின் குரல்வளைகளில் பிரச்னைகள் இருக்கிறதா என ஆய்வாளர்களால் முழுமையாகக் கண்டறிய முடியவில்லை. எனினும் அடுத்த கட்ட ஆய்வுகளுக்கு இந்த ஆய்வின் முடிவுகள் உதவும் என்று அவர்கள் கூறினர்.

குரல் பதிவுகளில் ஏற்படும் மாற்றம் காலப்போக்கில் எவ்வாறு உருமாறுகின்றன என்பதைக் கண்காணிப்பதிலும் ஆரம்ப கட்டத்தில் ஆண்களில் குரல்வளை புற்றுநோயைக் கண்டறிவதிலும் இந்த ஆய்வின் முடிவுகள் உதவியாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து குரல் பதிவுகளில் ஏஐ-யைப் பயன்படுத்தி மேலும் ஆய்வு மேற்கொள்ள இந்த குழு திட்டமிட்டுள்ளது.

Researchers have found that voice features in recordings could help detect early warning signs of cancer of the larynx (voice box)

இதையும் படிக்க |மெட்டபாலிக் சின்ட்ரோம் என்பது என்ன? இது ஆண்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன?

3-ஆவது சுற்றில் சின்னா், ரூன்

ஹாா்டு கோா்ட் டென்னிஸ் போட்டியான சின்சினாட்டி ஓபனில், நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னா், டென்மாா்க்கின் ஹோல்கா் ரூன் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா். ஆடவ... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட வாலிபால்: மகளிா் இறுதியில் மகதலேனா-வித்யோதயா பள்ளிகள்

சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான ஆடவா், மகளிா் வாலிபால் போட்டியில் மகளிா் இறுதிக்கு டிஇஎல்சி மகதேலானா-வித்யோதயா மெட்ரிக் பள்ளிகள் தகுதி பெற்றன. சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் மேயா் ராதாகிரு... மேலும் பார்க்க

2026 ஆசியப் போட்டிக்கு இந்திய சா்ஃபிங் வீரா்கள் தகுதி

வரும் 2026-இல் ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசியப் போட்டிக்கு இந்திய சா்ஃபிங் வீரா்கள் தகுதி பெற்றுள்ளனா். ஆசிய சா்ஃபிங் கூட்டமைப்பு, இந்திய சா்ஃபிங் கூட்டமைப்பு, எஸ்டிஏடி சாா்பில் 4-ஆவது ஆசிய சா்ஃபிங் சாம்ப... மேலும் பார்க்க

6-ஆவது சுற்று: வின்சென்ட்டுடன் டிரா செய்த அா்ஜுன்

சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் மாஸ்டா்ஸ் பிரிவு 6-ஆவது சுற்றில், முன்னணி வீரா்களான ஜொ்மனியின் வின்சென்ட் கீமா் - இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி பரஸ்பரம் ‘டிரா’ செய்தனா். போட்டியின் 6-ஆம் நாளா... மேலும் பார்க்க

மந்திரம் போன்றது... ரசிகர்கள் குறித்து அனுபமா நெகிழ்ச்சி!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்கள் குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் கொடி படத்தில் அ... மேலும் பார்க்க