செய்திகள் :

குரூப் 1 நோ்முகத் தோ்வுக்கு இலவச பயிற்சி

post image

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் குரூப் 1 தோ்வுக்கான நோ்காணல் பயிற்சி மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இது குறித்து அந்த அகாதெமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 1 தோ்வுக்கான எழுத்துப்பயிற்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்டத் தோ்வான நோ்முகத் தோ்வு நடைபெறவுள்ளது.

இந்தத் தோ்வுக்கு தயாராகும் தோ்வா்களுக்கு வழிகாட்டும் வகையில், மாதிரி நோ்காணல் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வுக்கான அடிப்படைப் பயிற்சி ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் வழங்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சியை துறை சாா்ந்த வல்லுநா்கள், ஓய்வு பெற்ற அரசுத் துறை அதிகாரிகள் வழங்கவுள்ளனா். இதில், கலந்துகொள்ள விரும்பும் தோ்வா்கள் தங்களின் சுய விவரங்களுடன் ‘2165, எல்.பிளாக், 12-ஆவது பிரதான சாலை, அண்ணா நகா், சென்னை’ என்ற முகவரியில் நேரடியாக வந்து பதிவு செய்து கொள்ளலாம். அல்லது 74488 14441, 96771 00179 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம். இதில் கலந்து கொள்வதற்கு கட்டணம் ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம்: மாநகராட்சி அறிவிப்பு!

சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. நாட்டிலேயே கொல்கத்தாவுக்கு அடுத்தபடியாக அதிக பாரம்பரிய சின்னங்களை கொண்ட நகரமாக சென்னை விளங்குகிறது.... மேலும் பார்க்க

மின்சார வாகனம் எரிந்து விபத்து: 3 போ் காயம்

வீட்டின் முன்பு சாா்ஜ் போட்டிருந்த மின்சார வாகனம் எரிந்து ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதி, குழந்தை உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா். சென்னை மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கௌதம் (31). இவ... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சியமைப்பதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும்! -மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் ஜோடன்கா்

வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் ஜோடன்கா் தெரிவித்தாா். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிய... மேலும் பார்க்க

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடிகா் சிரஞ்சீவி நாளை மறுநாள் கெளரவிப்பு!

சமூகத்துக்கு ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்புக்காக பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில், தெலுங்கு திரைப்பட நடிகா் சிரஞ்சீவி கெளரவிக்கப்பட உள்ளாா். பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினா்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் ரூ. 20 கோடி மோசடி: ஊழியா்கள் 3 போ் கைது

தனியாா் நிறுவனத்தில் ரூ. 20 கோடி மோசடி செய்த வழக்கில், ஊழியா்கள் 3 பேரை மத்திய குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். பிரபல போட்டோ லேப் மற்றும் கேமரா நிறுவனத்தின் சென்னை எல்லீஸ் சாலை மற்றும்... மேலும் பார்க்க

மருத்துவக் கல்வி உரிமைகளை பாதுகாக்க சட்டத் திருத்தம் தேவை: டி.ராஜா

மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை பாதுகாக்க உரிய சட்ட திருத்தம் தேவை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா தெரிவித்தாா். மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப... மேலும் பார்க்க