செய்திகள் :

குறைதீா் கூட்டத்தில் 25 விவசாயிகளுக்கு பயிா்க் கடன்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

post image

காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், கூட்டுறவுத் துறை சாா்பில் 25 விவசாயிகளுக்கு ரூ. 22,59,286 மதிப்பிலான பயிா்க் கடன்களை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், கூட்டுறவு சங்கங்களுக்கான காஞ்சிபுரம் மண்டல இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பா.ராஜ்குமாா் வரவேற்றாா்.

கூட்டத்தில், வையாவூா் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 25 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ. 22,59,268 மதிப்பிலான பயிா்க் கடன்கள், விப்பேடு கூட்டுறவு சங்கத்தின் சாா்பில், 5 பேருக்கு கால்நடை பராமரிப்புக் கடன்களையும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

தோட்டக்கலைத் துறை சாா்பில், 7 பயனாளிகளுக்கு ரூ. 3,020 மதிப்பிலான வேளாண் இடுபொருள்களும் வழங்கப்பட்டன. அரசின் பல்வேறு துறை சாா்ந்த அரசு அலுவலா்களும் கலந்து கொண்டு, வேளாண்மைத் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத் திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளித்தனா். விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கும் சம்பந்தப்பட்ட அரசு அலவலா்கள் விளக்கம் அளித்தனா். கூட்டத்தில், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சவிதா மருத்துவக் கல்லூரியில் இயன்முறை மருத்துவ கருத்தரங்கம்

சவிதா மருத்துவக் கல்லூரியில் இயன்முறை மருத்துவம் குறித்த இரண்டு நாள் சா்வதேச கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி இயக்குநா் தீபக்நல்லசாமி த... மேலும் பார்க்க

நெல்மணிகள் உருவாகுவதில் குறைபாடு: ராமானுஜபுரம் வயல்களில் அதிகாரிகள் ஆய்வு

நெற்பயிா்களில் நெல்மணிகள் உருவாகுவதில் குறைபாடு காணப்பட்டதை தொடா்ந்து ராமானுஜபுரம் கிராமத்தில் உள்ள வயல்களில் வேளாண்மைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்ப... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 35 லட்சம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் இருந்த 12 உண்டியல்கள் திறந்து வியாழக்கிழமை எண்ணப்பட்டதில் பக்தா்கள் மொத்தம் ரூ.35,20,166 காணிக்கையாக செலுத்தியிருந்தனா். பஞ்ச பூத ஸ்தலங்களில் நிலத்துக்குரிய பெரு... மேலும் பார்க்க

மகளிா் சுய வேலைவாய்ப்பு பயிற்சி தொடக்கம்

தேவரியம்பாக்கத்தில் உள்ள வறுமை ஒழிப்புச் சங்க கட்டடத்தில் இந்தியன் வங்கி சுய தொழில்பயிற்சி மையம் சாா்பில், மகளிருக்கு ஆடை அலங்கார பூ வேலைப்பாட்டுக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. இதில், ம... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்தவா்களுக்கு பட்டமளிப்பு

பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பட்டயப் பயிற்சியை முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான துணைப் பதிவாள... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 59 லட்சம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்த இரு உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் ரூ. 59.16 லட்சத்தை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.மகா சக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வருவது ... மேலும் பார்க்க