செய்திகள் :

குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விசாரிக்க கிரிக்கெட் மைதானம்தான் தேவைப்படும்: செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

post image

நமது நிருபர்

முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளில் 2,000-க்கும் மேற்பட்டவர்களை குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்த்ததற்காக தமிழக அரசை உச்சநீதிமன்றம் புதன்கிழமை கடிந்து கொண்டது.

மேலும், அனைத்து குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், சாட்சிகளின் விவரங்களைத் தெரிவிக்குமாறு கூறிய உச்சநீமன்றம், இத்தனை அதிகமான எண்ணிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டிருப்பதால் விசாரணை நடத்த கிரிக்கெட் மைதானம்தான் தேவைப்படும் என்று கூறியது.

இது தொடர்பான விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜாய்மால்ய பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட வழக்குகளின் விசாரணையை "திசைகாட்டி இல்லாத கப்பல்' என்று குறிப்பிட்டது.

மேலும், நீதித் துறை தலையீடு இல்லாமல் இருந்திருந்தால், வேலைக்கான பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட வழக்குகளை "தயக்கம் காட்டும் அரசு' கண்ணியமாக முடிக்க விரும்பியது என்று கூறியது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய வழக்குகளை ஒன்றாகச் சேர்த்து விசாரிப்பதற்கான முடிவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள ஒய்.பாலாஜி என்பவர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜரானார்.

அவரிடம் நீதிபதிகள் அமர்வு கூறுகையில், "2,000-க்கும் மேற்பட்ட குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் 500 சாட்சிகளும் உள்ள இந்த வழக்கு, இந்தியாவின் மிகவும் அதிகமான நபர்கள் இடம்பெற்ற விசாரணையாக இருக்கும். விசாரணை நீதிமன்றத்தின் ஒரு சிறிய நீதிமன்ற அறை இவர்களை விசாரிக்கப் போதுமானதாக இருக்காது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் இருப்பைக் குறிக்க ஒரு கிரிக்கெட் மைதானம்கூட தேவைப்படும்' என்று கூறியது.

இந்த விவகாரத்தில் ஒரு சிறப்பு அரசு வழக்குரைஞர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீது, நீதிபதிகள் அமர்வு தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வியிடம் கூறுகையில், "ஒரு சக்திவாய்ந்த அமைச்சரும் வசதி படைத்தவர்களும் ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்படும்போது, ஒரு தனி அரசு வழக்குரைஞரால் நீதி வழங்க முடியாது என்ற கருத்தாக்கம் நிலவுகிறது' என்றது.

சிறப்பு அரசு வழக்குரைஞரை நியமிப்பதற்கு அபிஷேக் சிங்வி ஆட்சேபம் தெரிவித்தார். மேலும், "இந்த வழக்கு விசாரணையை ஓராண்டு மேற்பார்வை செய்துவந்த உச்சநீதிமன்ற நீதிபதி அபய் ஓகா, சிறப்பு வழக்குரைஞரை நியமிக்கும் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்' என்றார்.

இதையடுத்து, நீதிபதி சூர்யகாந்த் கூறுகையில், "முதலில் எங்களுக்கு குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பட்டியல் வேண்டும். இதுதான் மிகப்பெரிய முட்டுக்கட்டை. மேலும், எங்களுக்கு சாட்சிகளின் பட்டியலையும் தாருங்கள். அப்போதுதான், எத்தனை குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களும், சாட்சிகளும் ஒன்றோடு ஒன்று சேர்கிறார்கள் என்பதை நாங்கள் பார்க்க முடியும்' என்றார்.

இதையடுத்து, வழக்கு விசாரணை ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்குப் பட்டியலிடப்பட்டது. செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளில் 2,000-க்கும் மேற்பட்டவர்களை பண மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக இணைத்து விசாரணையை தாமதப்படுத்த தமிழக அரசு முயல்கிறதா என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியிருந்தது.

மேலும், இந்த முயற்சி நீதித் துறை அமைப்பை முழுமையாக ஏமாற்றுவது என்றும் கூறியது.

முன்னதாக, உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்குப் பிறகு, ஏப்ரல் 27 அன்று செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

கற்பனை உலகில் வாழும் மோடி அரசும், அதன் ஆதரவாளர்களும்: ஜெய்ராம் ரமேஷ்

பிரதமர் நரேந்திர மோடி அரசு, உண்மையிலேயே நாட்டின் பொருளாதார நிலை குறித்த உண்மையைப் பேசுவதேயில்லை என காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறார்.கடந்த பத்தாண்டுகளாக, பெரும்பாலான தொழ... மேலும் பார்க்க

ரூ. 15,000 சம்பளம்; ஆனால், 24 வீடுகள், 40 ஏக்கர் நிலம், 4 மனைகள்! முன்னாள் அரசு ஊழியரின் மோசடி அம்பலம்!

கர்நாடகத்தில் முன்னாள் அரசு ஊழியர் ரூ. 72 கோடிக்குமேல் மோசடி செய்ததாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.கர்நாடகம் மாநிலத்தில் கொப்பல் நகரில் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறையில் எழுத்தராகப் பணிப... மேலும் பார்க்க

ஆட்டோவில் சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு அரசு நிகழ்வு ஒன்றில் பங்கேற்க ஆட்டோவில் சென்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார். ஆந்திர மாநிலம், கடப்பாவில் அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந... மேலும் பார்க்க

சைபர் மோசடியால் ரூ. 1.2 லட்சம் கோடியை இந்தியர்கள் இழப்பார்களா? நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்!

கடந்தாண்டில் மட்டும் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளால் இந்தியர்களிடம் ரூ. 22,842 கொள்ளையடிக்கப்பட்டதாக தில்லி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.சைபர் குற்றங்கள் மற்றும் மோசடி சம்பவங்கள் நாள்தோறும் நடந்... மேலும் பார்க்க

ராகுல் காந்தி கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: தேர்தல் ஆணையம் பதில்

வாக்குகள் திருடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக பல லட்சம் வாக்காளர்களை, வாக்காள... மேலும் பார்க்க

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

மாலேகான் குண்டுவெடிப்புக்குப் பிறகு காங்கிரஸ் இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா நிர்வாகிகள் திட்டமிட்ட முறையில் குறிவைக்கப்பட்டதாகவும் மகாராஷ்டிர முதல... மேலும் பார்க்க