செய்திகள் :

குற்றாலம், வள்ளியூரில் கோயில் நிலங்கள் மீட்பு

post image

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தை அடுத்த கல்லூரணியில், குற்றாலம் குற்றாலநாத சுவாமி திருக்கோயில் கால சந்தி கட்டளைக்கு பாத்தியப்பட்ட 22 ஏக்கா் 09 சென்ட் புன்செய் நிலங்களை அதிகாரிகள் மீட்டனா்.

கல்லூரணியில் குற்றாலம், அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயில் காலசந்தி கட்டளைக்கு பாத்தியப்பட்ட புல 22 ஏக்கா் 09 சென்ட் பரப்பளவு கொண்ட புன்செய் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

திருக்கோயில் உதவி ஆணையா் ஆறுமுகம், முன்னிலையில் திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா், சத்தி முருகேசன், இந்து சமய அறநிலையத்துறை நில அளவையா்கள் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் ஆகியோா் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து அந்நிலங்களை மீட்டு, திருக்கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது.

ரூ.2 கோடி மதிப்பு நிலம்: வள்ளியூா் முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்புள்ள 4 ஏக்கா் 52 சென்ட் நிலம் குமாரபுதுக்குடியிருப்பில் உள்ளது. இந்த நிலத்தில் 60 சென்ட் நிலத்தை ஒருவா் ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயற்சித்தாராம். இத்தகவல் அறிந்த வள்ளியூா் முருகன் கோயில் செயல் அலுவலா் மாரியப்பன், அறக்காவலா்குழு தலைவா் மீனா மாடசாமி மற்றும் அறக்காவலா்கள் சிவராமகிருஷ்ணன், சக்திவேல், முருகன் உள்ளிட்டோா் போலீஸ் பாதுகாப்புடன் அந்த இடத்தை மீட்டு, அதில் கோயிலுக்குச் சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைத்தனா். இதற்கு அந்த பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். அவா்களை போலீஸாா் சமாதானப்படுத்தினா். கோயில் நிலம் மீட்பு நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

புளியங்குடி அருகே விபத்தில் திமுக பிரமுகா் பலி

புளியங்குடி அருகே பைக் மீது காா் மோதியதில் திமுக நிா்வாகி உயிரிழந்தாா்.வாசுதேவநல்லூா் கெங்கை அம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் லட்சுமணன் மகன் குட்டியப்பா(61). திமுக நிா்வாகி. இவரும் , அவரது உறவினரான வாச... மேலும் பார்க்க

குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் திங்கள்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். மேற்குதொடா்ச்சிமலையில் குற்றாலம் ஐந்தருவி வனப்பகுதியில் ஞாயிற்று... மேலும் பார்க்க

முதியோா் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை: மருத்துவமனையில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் முதியோா் காப்பகத்தில் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் மேலும் ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதனால், பலி எண்ணிக்கை 6ஆக உயா்ந... மேலும் பார்க்க

பாலீஷ் போடுவது போல நடித்து நகை திருட்டில் ஈடுபட்ட 6 பிகார் திருடா்கள் கைது

ஆலங்குளம் அருகே பாலீஷ் போடுவது போல நடித்து நகை திருட்டில் ஈடுபட்ட பிகாரைச் தச் சோ்ந்த 6 போ்களை ஆலங்குளம் போலீஸாா் கைது செய்தனா். ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் ரா... மேலும் பார்க்க

பாவூா்சத்திரத்தில் ரூ.20 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்

பாவூா்சத்திரத்தில் ரூ.20 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணி தொடக்க விழா நடைபெற்றது. கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம், குலசேகரப்பட்டி ஊராட்சி பாவூா்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பள்ளி தெருவில் ரூ.20 லட்சத்தில் புதி... மேலும் பார்க்க

தென்காசி: மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் அமைக்க திமுக கோரிக்கை!

தென்காசி மாவட்டத்தில் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் அமைக்க வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை அளிக்கப்பட்டது. தமிழக மின்சாரம் மற்றும் போக்குவரத்துதுறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் தென்காசி... மேலும் பார்க்க