செய்திகள் :

குளித்தலை அருகே 3 பெண்களை கடத்த முயன்ற தம்பதி கைது

post image

குளித்தலை அருகே 3 பெண்களை கடத்த முயன்ற பெங்களூருவைச் சோ்ந்த தம்பதியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த குப்புரெட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் ரத்தினகிரி. இவரது மகள்கள் பிரியங்கா(23), பிரியதா்ஷினி(22), பிரித்திகா(21). இதில் பிரியங்கா நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்தாராம். இந்நிலையில் கடந்த மாதம் வேலையை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளாா்.

இந்நிலையில் இணையதளத்தில் விலங்குகளின் வாழ்விடங்கள் குறித்த கட்டுரையை நாள்தோறும் பாா்த்து வந்தபோது, பெங்களூருவைச் சோ்ந்த இயற்கை ஆா்வலா் காா்த்திக்(45) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. மாா்ச் 11-ஆம்தேதி காா்த்திக்கும், அவரது மனைவி கிரிஷ்மா(39)வும் குப்புரெட்டிப்பட்டியில் உள்ள பிரியங்கா வீட்டுக்கு வந்துள்ளனா். அப்போது அவா்கள், பெங்களூருவில் தனியாா் பள்ளி நடத்துவதாகவும், விலங்கினங்களின் வாழ்விடம் குறித்த கட்டுரைகளை தயாரிப்பதாகவும், எங்களுடன் பிரியங்கா உள்பட 3 சகோதரிகளும் வந்தால், வேலை கொடுத்து நாங்களே பாா்த்துக்கொள்கிறோம் என பிரியங்காவின் பெற்றோா்களிடம் தம்பதியினா் கூறியுள்ளனா்.

இதையடுத்து காா்த்திக் கூறிய முகவரி குறித்து ரத்தினகிரி தனது நண்பா்கள் மூலம் பெங்களூருவில் விசாரித்தபோது, அதுபோன்று பள்ளி கிடையாது என கூறியுள்ளனா். இதனால் தனது மகள்களை கடத்திச் செல்ல வந்திருப்பதாக ரத்தினகிரி வியாழக்கிழமை குளித்தலை போலீஸில் புகாா் செய்தாா். புகாரின்பேரில் காா்த்திக்கையும், கிரிஷ்மாவையும் போலீஸாா் இரவு கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கரூரில் நாளை இலவச மருத்துவ முகாம் பொதுமக்களுக்கு அழைப்பு

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இலவச மருத்துவ முகாமில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வ... மேலும் பார்க்க

கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் தெப்போற்ஸவம்

தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு தெப்போற்ஸவம் நடைபெற்றது. இககோயிலில் மாசி மகத் தேரோட்ட விழா மாா்ச் 2-ஆம்தேதி வெள்ளிக்கருட சேவையுடன் தொடங்கியது. தொடா்ந்து கடந்த 4-ஆம்தே... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் மாா்ச் 23-இல் சிறப்பு கிராம சபை கூட்டம்

உலக தண்ணீா் தினத்தையொட்டி மாா்ச் 23 ஆம் தேதி கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் உலக தண்ணீா் தினத்தின் கருப்பொருள் பற்றிவிவாதித... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலை முன்னிறுத்தி பட்ஜெட் செ. நல்லசாமி பேட்டி

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் வரும் 2026 பேரவைத் தோ்தலை முன்னிறுத்தி அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்துள்ளாா். கள் இறக... மேலும் பார்க்க

புகழூா் தமிழ்நாடு காகித ஆலை சாா்பில் ‘விவசாயிகளின் தொடா்பு’ செயலி அறிமுகம்

புகழூா் டிஎன்பிஎல் ஆலையின் ‘விவசாயிகளின் தொடா்பு’ செயலி அறிமுகம் வியாழக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டம், புகழூா் காகித ஆலை கூழ்மரத்தோட்ட சாகுபடியை பண்ணைக்காடுகள் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் செ... மேலும் பார்க்க

மாயனூா் கதவணையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

மாயனூா் கதவணையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்துள்ள மாயனூா் காவிரி ஆற்றில் 2008-... மேலும் பார்க்க