செய்திகள் :

``ரூ.130 கோடி சொத்து இருக்கு... ஆனா, சும்மா இருக்க கூடாது'' - ஊபரில் கார் ஓட்டும் கோடீஸ்வரன்

post image

'டீல்ஸ் தமாக்கா' என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனர் வினீத் அமெரிக்காவில் தான் சந்தித்த ஊபர் கார் டிரைவரை பற்றி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த சுவாரஸ்ய நிகழ்வு குறித்து வினீத், "இன்று ஊபர் டிரைவர் ஒருவரை சந்தித்தேன். அவர் மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனத்தின் சீனியர் நிர்வாகியாக முன்னர் பணிபுரிந்துள்ளார். அமெரிக்காவில் அவருக்கு 1.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள இரண்டு வீடுகள் உள்ளது. பல்கேரியா நாட்டில் 3.5 மில்லியன் யூரோஸ் உள்ளது. அவரது 3 பிள்ளைகளும் செட்டில் ஆகிவிட்டனர். ஒருவர் லண்டனில் வழக்கறிஞராக இருக்கிறார். மீதி இரண்டு பேர் ஐரோப்ப யூனியனில் கால்பந்து அணியில் உள்ளனர்.

அமெரிக்காவில் இரண்டு வீடுகள், பல்கேரியாவில்...

அமெரிக்காவில் அவரது மனைவி வேலை செய்துக்கொண்டிருப்பதால், இன்னமும் அவர் அமெரிக்காவிலேயே இருக்கிறார். அவருடைய மொத்த சொத்தின் மதிப்பு 15 மில்லியன் டாலர்கள் (130 கோடி ரூபாய்). ஆனாலும் வேலை செய்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு போர் அடிப்பதால், ஊபர் டிரைவர் வேலையை செய்துக்கொண்டிருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

ஒருவேளை, உங்களுக்கு இவ்வளவு சொத்து இருந்து Bore அடித்தால் இவரை மாதிரி என்ன வேலை செய்வீர்கள்?!

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

International Women's Day: பெண்களின் வருமானம் 'ஆப்ஷனல்' அல்ல... அத்தியாவசியம்! #AccelerateAction

50 ஆண்டுகள்... 600 மாதங்கள்... 2,609 வாரங்கள்... 18,263 நாட்கள்... இந்த உலகம் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடத் தொடங்கி இவ்வளவு காலங்கள் ஆகிவிட்டன. 1975-ம் ஆண்டு, முதன்முறையாக மார்ச் 8-ஐ சர்வதேச மகளிர்... மேலும் பார்க்க

'கண் அசைவும், பேச்சும் மட்டும்தான்' - தசை நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் முதுகலைப் பட்டம் பெற்று சாதனை!

“காடு இருந்தா எடுத்துக்குவானுங்க. ரூவா இருந்தா புடுங்கிக்குவானுங்க. படிப்பை மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது” - இது இந்தக் கால அசுரன் திரைப்படம். 'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும... மேலும் பார்க்க

'விவசாயத்துல அவ்வளவு லாபம் இல்லை; ஆனா கடையில...' - பகுதி நேர விவசாயி; முழு நேர வியாபாரியின் கதை!

திருநெல்வேலி நீதிமன்ற சாலையை கடக்கும் எவரும் இந்தத் தள்ளுவண்டி கடையை காணாமல் கடந்திருக்க வாய்ப்பே இல்லை. நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் எதிரிலுள்ள பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் தள்ளுவண்டி கடை ... மேலும் பார்க்க