செய்திகள் :

'அவரின் பாசிட்டிவிட்டியை பாராட்டுகிறோம்' - மோடியை பாராட்டும் சீனா... காரணம் என்ன?

post image

லெக்ஸ் ஃப்ரித்மேன் உடனான இந்திய பிரதமர் மோடியின் பாட்காஸ்ட் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. அதற்கு பரவலான வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அந்தப் பாட்காஸ்ட்டை சீனாவும் பாராட்டியுள்ளது.

அந்தப் பாட்காஸ்ட்டில் மோடி இந்தியா - சீனா உறவு குறித்து, "கடந்த அக்டோபர் மாதம், எனக்கும் சீனா அதிபர் ஜின்பிங் இடையிலான சந்திப்பிற்கு பிறகு இந்திய - சீனா எல்லை பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக சுமூகமாகி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மற்றும் நம்பிக்கை மீண்டும் நிச்சயம் திரும்பும்.

இந்தியா - சீனா

இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் இருக்கும் வித்தியாசங்கள் இயல்பானது தான். ஆனால், அந்த வித்தியாசங்கள் சண்டையாக மாறாமல் பார்த்து கொள்வது தான் முக்கியம்" என்று பேசியுள்ளார்.

இதுக்குறித்து சீனா வெளியுறவு துறை அமைச்சர், "இந்தியா மற்றும் சீனா எல்லை என்பது பரஸ்பர கற்பித்தல்கள் மற்றும் தோழமையால் 2,000-க்கும் மேற்பட்ட ஆண்டுகளால் ஆனது" என்று குறிப்பிட்டுள்ளார்.

சீனா வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், "பிரதமர் மோடியில் பாசிட்டிவ் பதில்களை சீனா வரவேற்கிறது" என்று கூறியுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

தென்காசி: அரசு அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட முன்னாள் முதல்வர் புகைப்படம்; அதிமுக-வினர் கண்டனம்!

தென்காசி நகரப் பகுதியில் புது பஸ்டாண்ட் செல்லும் வழியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் முன்னாள், இந்நாள் தமிழக முதல்வர்களின் போட்டோக்கள் வைக்கப்பட்டு பராமரிக்கப... மேலும் பார்க்க

ஆரோவில்: `மரங்களை வெட்டி வளர்ச்சி பணிகளை செய்யலாம்!'- பசுமை தீர்பாயம் உத்தரவை ரத்துசெய்த நீதிமன்றம்

புதுச்சேரியை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது ஆரோவில். மனித இனத்தின் ஒற்றுமையை பரிசோதித்து பார்ப்பதற்காக, மறைந்த அரவிந்த அன்னை அவர்களால் தோற்றுவிக்கப்பட்டதுதான் ஆரோவில் சர்வதேச நகரம். 5... மேலும் பார்க்க

விழுப்புரம்: `விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வெற்றி செல்லும்!’ – சென்னை உயர் நீதிமன்றம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டித் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த புகழேந்தி உயிரிழந்ததையடுத்து, 2024 ஜூலை 10-ம் தேதி அங்கு இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, ... மேலும் பார்க்க

புதுச்சேரி: ``கடைகளின் பெயர் பலகைகளில் தமிழ் கட்டாயம்" - முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி சட்டப்பேரவையின் 2025-26 பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 10-ம் தேதி தொடங்கியது. 12-ம் தேதி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், அதன் மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. அதி... மேலும் பார்க்க

Israel - Gaza : மீண்டும் போரை தொடங்கியிருக்கும் இஸ்ரேல்... காஸா மீது தாக்குதல்; 300 பேர் பலி

ஜனவரி மாதம் தொடங்கிய போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று அதிகாலை முதல் காஸா முழுவதும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் குழந்தைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்... மேலும் பார்க்க