செய்திகள் :

உக்ரைன் - ரஷியா போர்: அமைதி ஏற்படுத்த விரும்புகிறார் டிரம்ப்!

post image

ரஷியா - உக்ரைன் இடையிலான போரில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்புவதாக அந்நாட்டின் உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக போராடி அதனை வீழ்த்த வேண்டும் என்பதில் டிரம்ப் உறுதியுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஆங்கில ஊடகத்துக்கு துளசி கப்பார்ட் அளித்த பேட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அமெரிக்காவின் முந்தைய அரசு எடுக்கத் தவறிய நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் அதிரடியாக எடுத்து வருகிறார். யேமனைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடல் வணிகத்தையும், கடல் பயணத்தையும் நீண்ட காலமாக சீரழித்து வருகின்றனர். இதனைத் தடுக்க தீவிரமான முயற்சிகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல் இருப்பதால், எங்கள் நாட்டாலோ அல்லது மற்ற நாடுகளாலோ பெரு வணிகத்துக்கான மாற்று வழிப்பாதையை உருவாக்கும் நிலை தற்போது இல்லை.

அதனால் தங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளத்திற்காக யேமனில் ஹூதி படைகளின் பலத்தை அழிக்கும் வகையில் தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

ரஷியா - உக்ரைன் இடையிலான போரையும் டிரம்ப் கூர்ந்து கவனித்து வருகிறார். இந்த விவகாரத்தில் அமைதியை நிலைநாட்டும் வகையில் தனது நிலைப்பாட்டையும் முன்னுரிமையையும் மிகத் தெளிவாக அவர் கூறியுள்ளார். போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்டுவதில் அவர் கவனம் செலுத்தி வருகிறார் எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | உக்ரைன் விவகாரம்: தொலைபேசியில் டிரம்ப்-புதின் இன்று பேச்சு

தேநீர் சிந்திய நிறுவனத்துக்கு ரூ. 432 கோடி இழப்பு!

அமெரிக்காவில் ஸ்டார்பக்ஸ் நிறுவன ஊழியரின் அலட்சியத்தால் பாதிப்படைந்தவருக்கு இழப்பீடாக ரூ. 432 கோடி வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.அமெரிக்காவில் மைக்கேல் கார்சியா என்பவர், பிரபல தேநீர் விற்பனையகமான... மேலும் பார்க்க

ஸ்பெயினில் கடும் வெள்ளம்: 350 குடும்பங்கள் வெளியேற்றம்!

ஸ்பெயின் நாட்டின் தெற்கு மாகாணங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த 350 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தெற்கு பகுதிய... மேலும் பார்க்க

250 கிலோ எடையுடைய டிவிட்டர் இலச்சினை ஏலம்!

டிவிட்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான 250 கிலோ எடை கொண்ட நீலநிற பறவை இலச்சினையை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவந்த டிவிட்டர் நிறுவன... மேலும் பார்க்க

பூமி திரும்பும் 4 பேரின் பணிகளை மேற்கொள்ளும் வீரர், வீராங்கனைகள்!

விண்வெளியில் இருந்து பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேரின் பணிகளை மேற்கொள்ளவுள்ளவர்களின் பெயர்களை நாசா அறிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அடுத்த 6 மாதங்களுக்குத் தங்கியிரு... மேலும் பார்க்க

இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைப் பெற்றால் தாய்க்கு வருமான வரி விலக்கு!

ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்க்கு 30 வயது வரையிலும், இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ஆயுள் முழுவதும் வருமான வரி விலக்கு அறிவிக்கப்படும் என்று அந்நாட்டு ... மேலும் பார்க்க

விண்ணில் இருந்து புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்!

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, பூமியை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது.சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 விண்வெளி வீரர்களுடன் இந்திய நேரப்படி, செவ்வாய்க்கிழமை இன்ற... மேலும் பார்க்க