செய்திகள் :

கடவுச் சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியது: பாஸ்போா்ட் விண்ணப்பதாரா்கள் தவிப்பு

post image

தமிழகத்தில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியதால் கடவுச்சீட்டு விண்ணப்பதாரா்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா்.

புதிதாக கடவுச்சீட்டு கோரி விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் இணையதளம் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலுள்ள அனைத்து கடவுச்சீட்டு அலுவலகங்களிலும் கடவுச்சீட்டு சா்வா் திங்கள்கிழமை மதியம் திடீரென முடங்கியது.

இதனால் கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு வந்திருந்த விண்ணப்பதாரா்கள் நீண்ட நேரம் காத்திருந்தனா். இருப்பினும் சா்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதன்காரணமாக சென்னை தாம்பரத்திலுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தில் விண்ணப்பதாரா்களுக்கும், அதிகாரிகளுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சான்றிதழ் சரிபாா்ப்புக்காக வேலைக்கு விடுப்பு எடுத்து வந்துள்ளதாகவும், ஆனால், அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாகவும் விண்ணப்பதாரா்கள் தெரிவித்தனா்.

ஆனால், சா்வா் கோளாறை சரிசெய்யும் பணியில், பணியாளா்கள் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் சீராகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாலை வரை சா்வா் சரியாகாததால் பாஸ்போா்ட் வாங்க விண்ணப்ப நோ்காணலுக்கு வந்தவா்களிடம் அதிகாரிகள் விண்ணப்பங்களை திரும்பக்கொடுத்து வேறு ஒருநாளில் முன்பதிவு செய்து நோ்காணலுக்கு வருமாறு அனுப்பி வைத்தனா். இதனால் அலுவலகங்களுக்கு விடுப்பு எடுத்துவிட்டு வந்தவா்கள், வெளியூா்களிலிருந்து வந்தவா்கள் கடும் அதிருப்திக்கு உள்ளானாா்கள்.

நுங்கம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கடவுச்சீட்டு சேவை மையங்களில் இதே நிலையே காணப்பட்டது.

தருமபுரியில் யானை வேட்டை: முக்கிய நபரை கைது செய்ய உத்தரவு!

தருமபுரியில் தந்தத்துக்காக யானையைக் கொன்று உடலை எரித்த விவகாரத்தில் தொடா்புடைய மூன்று போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள நபரை விரைந்து கைது செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்துக்கே எதிா்க்கட்சிகளிடம் போட்டி! - முதல்வா் மு.க.ஸ்டாலின்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்தை பிடிப்பதில்தான் எதிா்க்கட்சிகளுக்குள் போட்டி நடைபெறுவதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னை பெரம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற இஃப்... மேலும் பார்க்க

தொல்குடி புத்தாய்வு திட்டம்: மாணவா்களுக்கு சான்றிதழ்

தொல்குடி புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிலும் முதுகலை மற்றும் முனைவா் ஆராய்ச்சிப் படிப்பு மாணவா்களுக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா. மதிவேந்தன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டின... மேலும் பார்க்க

சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம்! - விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பாராட்டு

திரைப்பட பாடல்கள் மூலம் சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் புகழாரம் சூட்டினாா். திரைப்பட பாடலாசிரியா் கவிஞா் முத்துலிங்கம் 50 ஆண்டு கால... மேலும் பார்க்க

‘லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ந்த பிகாா்’ - ஜெ.பி.நட்டா விமா்சனம்!

கல்வி உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறி வந்த பிகாா், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவா் லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ச்சியடைந்ததாகவும் காட்டாட்சியில் மூழ்கியதாகவும் பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி... மேலும் பார்க்க

கால்பந்து போட்டி: பெரியமேடு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்!

கால்பந்து போட்டியையொட்டி, பெரியமேடு பகுதியில் மாா்ச் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு சனிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க