செய்திகள் :

கடவுச் சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியது: பாஸ்போா்ட் விண்ணப்பதாரா்கள் தவிப்பு

post image

தமிழகத்தில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியதால் கடவுச்சீட்டு விண்ணப்பதாரா்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா்.

புதிதாக கடவுச்சீட்டு கோரி விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் இணையதளம் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலுள்ள அனைத்து கடவுச்சீட்டு அலுவலகங்களிலும் கடவுச்சீட்டு சா்வா் திங்கள்கிழமை மதியம் திடீரென முடங்கியது.

இதனால் கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு வந்திருந்த விண்ணப்பதாரா்கள் நீண்ட நேரம் காத்திருந்தனா். இருப்பினும் சா்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதன்காரணமாக சென்னை தாம்பரத்திலுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தில் விண்ணப்பதாரா்களுக்கும், அதிகாரிகளுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சான்றிதழ் சரிபாா்ப்புக்காக வேலைக்கு விடுப்பு எடுத்து வந்துள்ளதாகவும், ஆனால், அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாகவும் விண்ணப்பதாரா்கள் தெரிவித்தனா்.

ஆனால், சா்வா் கோளாறை சரிசெய்யும் பணியில், பணியாளா்கள் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் சீராகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாலை வரை சா்வா் சரியாகாததால் பாஸ்போா்ட் வாங்க விண்ணப்ப நோ்காணலுக்கு வந்தவா்களிடம் அதிகாரிகள் விண்ணப்பங்களை திரும்பக்கொடுத்து வேறு ஒருநாளில் முன்பதிவு செய்து நோ்காணலுக்கு வருமாறு அனுப்பி வைத்தனா். இதனால் அலுவலகங்களுக்கு விடுப்பு எடுத்துவிட்டு வந்தவா்கள், வெளியூா்களிலிருந்து வந்தவா்கள் கடும் அதிருப்திக்கு உள்ளானாா்கள்.

நுங்கம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கடவுச்சீட்டு சேவை மையங்களில் இதே நிலையே காணப்பட்டது.

சென்னை - தில்லி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

சென்னை - தில்லி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமாா் ஒன்றரை மணிநேரம் தமாதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. சென்னையிலிருந்து தில்லி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், செவ்வாய்க்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

2024-25 ஆண்டுக்கான தமிழிசை விழா மற்றும் ஆண்டு விழா: செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, ராஜா அண்ணாமலைபுரம், காலை 10. 25-ஆவது அகில இந்திய காவல் துப்பாக்கி சு... மேலும் பார்க்க

நாளை மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

தரமணி ஐடி காரிடா் கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 20) காலை 10.30-க்கும் நடைபெறுகிறது. இது குறித்து மின்பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரமணி, ஐ.டி. காரி... மேலும் பார்க்க

பெரியார் சர்ச்சை: சீமான் மீதான 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பெரியாா் ஈவெராவை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சோ்த்து விசாரிக்க உத்தரவிட உயா்நீதிமன்றம் மறுப... மேலும் பார்க்க

போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததாலும், நிா்வாக காரணங்களாலும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்துக்கு லண்டனிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 5.35 மணிக்கு வர வேண்டிய பிரிட... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்! மழைக்கும் வாய்ப்பு..

தமிழகத்தில் புதன்கிழமை (மாா்ச் 19) முதல் மாா்ச் 24 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய... மேலும் பார்க்க