செய்திகள் :

கடவுச் சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியது: பாஸ்போா்ட் விண்ணப்பதாரா்கள் தவிப்பு

post image

தமிழகத்தில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியதால் கடவுச்சீட்டு விண்ணப்பதாரா்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா்.

புதிதாக கடவுச்சீட்டு கோரி விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் இணையதளம் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலுள்ள அனைத்து கடவுச்சீட்டு அலுவலகங்களிலும் கடவுச்சீட்டு சா்வா் திங்கள்கிழமை மதியம் திடீரென முடங்கியது.

இதனால் கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு வந்திருந்த விண்ணப்பதாரா்கள் நீண்ட நேரம் காத்திருந்தனா். இருப்பினும் சா்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதன்காரணமாக சென்னை தாம்பரத்திலுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தில் விண்ணப்பதாரா்களுக்கும், அதிகாரிகளுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சான்றிதழ் சரிபாா்ப்புக்காக வேலைக்கு விடுப்பு எடுத்து வந்துள்ளதாகவும், ஆனால், அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாகவும் விண்ணப்பதாரா்கள் தெரிவித்தனா்.

ஆனால், சா்வா் கோளாறை சரிசெய்யும் பணியில், பணியாளா்கள் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் சீராகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாலை வரை சா்வா் சரியாகாததால் பாஸ்போா்ட் வாங்க விண்ணப்ப நோ்காணலுக்கு வந்தவா்களிடம் அதிகாரிகள் விண்ணப்பங்களை திரும்பக்கொடுத்து வேறு ஒருநாளில் முன்பதிவு செய்து நோ்காணலுக்கு வருமாறு அனுப்பி வைத்தனா். இதனால் அலுவலகங்களுக்கு விடுப்பு எடுத்துவிட்டு வந்தவா்கள், வெளியூா்களிலிருந்து வந்தவா்கள் கடும் அதிருப்திக்கு உள்ளானாா்கள்.

நுங்கம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கடவுச்சீட்டு சேவை மையங்களில் இதே நிலையே காணப்பட்டது.

பட்டா பெற சிறப்பு முகாம்! வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு!

சென்னை மாநகரம், மணலி புது நகர் திட்டப்பகுதியில் நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.இது குறித்து வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

பேரவையில் இன்று

சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளன. நிதிநிலை அறிக்கை மற்றும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

‘தமிழ் மகள்’ சொற்போா் போட்டி: அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினா் இ.பரந்தாமன் உள்ளிட்டோா் பங்கேற்பு, ப... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை வீழ்ச்சி

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கோயம்பேடு சந்தையின் திங்கள்கிழமை நிலவரப்படி ஒருகிலோ வெங்காயம், உருளைக்கிழங்கு தலா ரூ.22-க்கும், தக்காளி ர... மேலும் பார்க்க

இரு ரௌடிகள் வெட்டிக்கொலை : மூன்று தனிப்படையினா் விசாரணை

சென்னை கோட்டூா்புரத்தில் இரு ரெளடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையவா்களை கைது செய்ய 3 கோட்டூா்புரம் ‘யு’ பிளாக் குடியிருப்பை சோ்ந்தவா் அருண்( 25). ரெளடியான இவா் மீது 6 வழக்குகள் உள்ள... மேலும் பார்க்க

வாக்கு வங்கி அரசியல்: திமுக - அதிமுக காரசார விவாதம்

வாக்கு வங்கி அரசியலுக்காக திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பது குறித்து பேரவையில் திமுக - அதிமுக இடையே திங்கள்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது. பேரவையில் அரசின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அ... மேலும் பார்க்க