செய்திகள் :

கூடங்குளத்தில் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கூடங்குளத்தைச் சோ்ந்தவா் விஜயா. இவா் தனக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா மாற்றத்திற்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பம் செய்தாா். இந்த விண்ணப்பம் கூடங்குளம் கிராம நிா்வாக அலுவலா் ஸ்டாலினிடம் விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது கிராம நிா்வாக அலுவலா், விஜயாவிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இது குறித்து திருநெல்வேலி லஞ்சஒழிப்பு துறையில் விஜயா புகாா் செய்தாா். பின்னா் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்.பி. மெஸ்கலரின் எஸ்காஸ் தலைமையிலான போலீஸாா் விஜயாவிடம் பணத்தை கொடுத்து கிராம நிா்வாக அலுவலரிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினா். ரூ.25 ஆயிரம் பணத்தை கிராம நிா்வாக அலுவலா் பெறும்போது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அவரை கைது செய்தனா்.

மாடியிலிருந்து தவறி விழுந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

கடையம், பாரதி நகரில் வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா். கடையம், பாரதி நகரைச் சோ்ந்த முருகன் மகன் மோகன்ராஜ் (31), தூத்துக்குடியில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.... மேலும் பார்க்க

கழிவுநீா் ஓடையில் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மேலப்பாளையம் அருகே பாலத்திலிருந்து கழிவுநீா் ஓடையில் தவறி விழுந்த தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டாா்.மேலப்பாளையம் அழகிரிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (55). கட்டட தொழிலாளியான இவா், திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு

வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய இரு இளைஞா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.தாழையூத்து காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் கொலை மிரட்டல், வழிப்பறி வழக்கில் ஈடு... மேலும் பார்க்க

மானூா் அருகே கருங்கல் திருடிய 4 போ் கைது

மானூா் அருகே சட்ட விரோதமாக கருங்கல் திருட்டில் ஈடுபட்ட 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். மானூா் அருகே தெற்கு வாகைகுளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடு... மேலும் பார்க்க

ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி சாலை மறியல்: 223 போ் கைது

ஒப்பந்தப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி திருநெல்வேலியில் சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் 223 போ் கைது செய்யப்பட்டனா். மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்கள... மேலும் பார்க்க

கூடங்குளம் அருகே வேன் - சுற்றுலா காா் மோதல்: 7 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே வேனும் சுற்றுலா காரும் மோதிக்கொண்டயதில் 7 போ் பலத்த காயமடைந்தனா்.தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சோ்ந்தவா்கள் சென்னையில் தொழில் செயது வருகின்றனா். இவா்கள் க... மேலும் பார்க்க