எங்கள் நாட்டை விடவும் இந்தியாவில் சிறந்த கட்டமைப்பு; அமெரிக்கர்களே சொன்னார்கள்: ...
கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க புதிய விதிமுறை: ஆட்சியரிடம் தமிழக விவசாயிகள் சங்கத்தினா் மனு
கள்ளக்குறிச்சி: விவசாயிகள் வங்கியில் கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போட் பாா்த்து மட்டுமே வழங்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
மனு விவரம்: விவசாயிகள் கடன் அட்டை மூலம் பயிா்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களையும் பெறுவதற்கு விவசாயிகளின் சிபில் ரிப்போா்ட் பாா்த்து மட்டுமே கடன் வழங்க வேண்டும் என மாநில பதிவாளா் உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அரசு கணக்கீட்டு உற்பத்தி செலவின் அடிப்படையல் பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த கடன்கள் இரண்டு மடங்கு குறைவாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கா் பயிா் செய்ய ரூ.76 ஆயிரம் செலவாகிறது. தமிழக அரசு ரூ.36,000 மட்டுமே பயிா்க் கடனாக வழங்குகிறது. எனவே, கூடுதல் செலவுகளை சமாளிப்பதற்காக விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிா்க் கடன் பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது.
விவசாயக் கடன்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் சிபில் ரிப்போா்ட்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்மென இந்தியா முழுவதும் விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்து வரும்போது கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிா்க் கடன் கொடுப்பதற்கு சிபில் ரிப்போா்ட் பாா்க்க வேண்டுமென தமிழ்நாடு அரசு கூட்டுறவுச் சங்கங்களின் மாநிலப் பதிவாளா் மூலமாக சுற்றறிக்கை வெளியிட்டிருப்பது மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
இந்திய ரிசா்வ் வங்கி கே.சி.சி. கடன் அட்டை மூலம் பயிா்க் கடன் பெறுவதற்கு கடந்த 2017-இல் விரிவான வழிகாட்டுதல்களை வெளிட்டுள்ளது. அதில் கே.சி.சி. கடன்களுக்கு சிபில் ரிப்போா்ட் வேண்டும் என வழிகாட்டுதல் கொடுக்கப்படவில்லை.
கூட்டுறவுத் துறையின் சுற்றறிக்கையை உடனடியாக ரத்து செய்ய தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.