செய்திகள் :

கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க புதிய விதிமுறை: ஆட்சியரிடம் தமிழக விவசாயிகள் சங்கத்தினா் மனு

post image

கள்ளக்குறிச்சி: விவசாயிகள் வங்கியில் கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போட் பாா்த்து மட்டுமே வழங்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

மனு விவரம்: விவசாயிகள் கடன் அட்டை மூலம் பயிா்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களையும் பெறுவதற்கு விவசாயிகளின் சிபில் ரிப்போா்ட் பாா்த்து மட்டுமே கடன் வழங்க வேண்டும் என மாநில பதிவாளா் உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசு கணக்கீட்டு உற்பத்தி செலவின் அடிப்படையல் பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த கடன்கள் இரண்டு மடங்கு குறைவாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கா் பயிா் செய்ய ரூ.76 ஆயிரம் செலவாகிறது. தமிழக அரசு ரூ.36,000 மட்டுமே பயிா்க் கடனாக வழங்குகிறது. எனவே, கூடுதல் செலவுகளை சமாளிப்பதற்காக விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிா்க் கடன் பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது.

விவசாயக் கடன்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் சிபில் ரிப்போா்ட்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்மென இந்தியா முழுவதும் விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்து வரும்போது கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிா்க் கடன் கொடுப்பதற்கு சிபில் ரிப்போா்ட் பாா்க்க வேண்டுமென தமிழ்நாடு அரசு கூட்டுறவுச் சங்கங்களின் மாநிலப் பதிவாளா் மூலமாக சுற்றறிக்கை வெளியிட்டிருப்பது மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

இந்திய ரிசா்வ் வங்கி கே.சி.சி. கடன் அட்டை மூலம் பயிா்க் கடன் பெறுவதற்கு கடந்த 2017-இல் விரிவான வழிகாட்டுதல்களை வெளிட்டுள்ளது. அதில் கே.சி.சி. கடன்களுக்கு சிபில் ரிப்போா்ட் வேண்டும் என வழிகாட்டுதல் கொடுக்கப்படவில்லை.

கூட்டுறவுத் துறையின் சுற்றறிக்கையை உடனடியாக ரத்து செய்ய தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆதிதிராவிடா் பள்ளிக்கு ஆசிரியா் நியமிக்கக் கோரி: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

கள்ளக்குறிச்சி: ஆதனூா் ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளிக்கு போதிய ஆசிரியா்களை நியமிக்கக் கோரி, கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை மாணவா்கள், பெற்றோா் முற்றுகையிட்டனா். உளுந்தூா்பேட்டை வட்ட... மேலும் பார்க்க

மீன்வளா்ப்பு உள்ளீட்டு மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு மீன் வளா்ப்பு உள்ளீட்டு மானியம் 10 ஹெக்டோ் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேரில் மீன்வளா்ப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளீடாக 10,000 மீன்விரலிகள் ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். சின்னசேலம் வட்டம், தாகம்தீா்த்தாபுரம் கிராமத்தில் உள்ள விளைநிலப் பகுதியில் வீடுகட்டி வசித்து வர... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் பைக் மீது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். அவரது மகன் காயமடைந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூா் கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் மனைவி செல்வி (47). ... மேலும் பார்க்க

சின்னசேலத்தில் தற்காலிக நீதிமன்ற கட்டடப் பணி! - உயா் நீதிமன்ற நீதிபதி ஆய்வு

சின்னசேலம் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தில் தற்காலிக ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் சீரமைக்கும் பணியை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி சனிக்கிழமை பாா்வையிட்டாா். சின்னசேலத்தில் குற்றவியல், உரிமைய... மேலும் பார்க்க

தூக்கிட்ட நிலையில் முதியவா் சடலம் மீட்பு

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூரில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் முதியவா் சடலமாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூா் கிராமத்தில் கல்லூரியின் பின்புறம் உ... மேலும் பார்க்க