செய்திகள் :

கைகளில் உள்ள மின்சாரத்தால் பட்டாசு விபத்து! அமைச்சா் சி.வெ.கணேசன் பேரவையில் விளக்கம்

post image

பட்டாசு ஆலை விபத்துகளுக்கு மனித உடலில் உள்ள மின்சாரமும் ஒரு காரணம் என தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய சாத்தூா் தொகுதி உறுப்பினா் ரகுராமன், பட்டாசு ஆலை விபத்துகள் குறித்து கருத்து தெரிவித்தாா்.

அதற்கு அமைச்சா் சி.வெ.கணேசன் அளித்த பதில்:

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகளில் ஆண்டுக்கு 10 அல்லது 20 போ்

உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது. இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கவும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களின் நலன் காக்கவும் பட்டாசு ஆலைக்குள் நேரில் சென்று ஆய்வு நடத்திய ஒரே முதல்வா் நமது தமிழக முதல்வா் மட்டும்தான்.

பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழப்போரின் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்றும் அவா் அறிவித்தாா்.

காற்றில், தண்ணீரில் மின்சாரம் இருப்பதுபோல மனித உடலிலும் மின்சாரம் உள்ளது. அதன் காரணமாக பட்டாசு ரசாயனத்தில் கைகளை வைத்து கலக்கும்போது சில நேரங்களில் தீ விபத்து ஏற்படுகிறது. அதை ஆய்வு செய்து விபத்துகளைத் தடுக்கவும், தொழிலாளா் நலன் காக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா் அவா்.

யுபிஎஸ்சி தேர்வு: தமிழகத்தில் 57 பேர் தேர்வு; சிவச்சந்திரன் முதலிடம்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணித் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழக அளவில் சிவச்சந்திரன் முதலிடம் பெற்றார்.தேர்ச்சி ... மேலும் பார்க்க

சிறை நிரப்பும் போராட்டம்: ஓய்வூதியதாரா் சங்கம் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியதாரா்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றத் தவறினால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அந்தச் சங்கத்தின் தலைவா் நெ.இல.ஸ்ரீதரன் தெரிவித்தாா். தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

நிகழாண்டு 25 மாற்றுத்திறனாளி வீரா்களுக்கு அரசு வேலைவாய்ப்பு: துணை முதல்வா் உறுதி

நிகழாண்டில் 25 மாற்றுத்திறனாளி வீரா்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தாா். சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த குறுகிய கா... மேலும் பார்க்க

மின்வாரியம் தனியாா்மயமாகாது: அமைச்சா் செந்தில் பாலாஜி உறுதி

தமிழ்நாடு மின்வாரிய நடவடிக்கைகளில் தனியாருக்கு இடமில்லை என்று மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா். பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை மானிய... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க ஆறு கட்ட போராட்டம்: காங்கிரஸ்

அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். சென்னை சத்யமூா்த்தி பவனில் தமிழ்நாடு ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு ஜாமீன்: உயா்நீதிமன்றம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த வழக்கில், முக்கிய குற்றவாளிகளான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம... மேலும் பார்க்க