செய்திகள் :

”கைதிகளுடன் தனிமையில் இருக்கலாம்...” - சிறையில் திறக்கப்பட்ட ”பாலியல் அறை” - எங்கே தெரியுமா?

post image

இத்தாலியில் சிறை கைதிகளுக்காக முதன்முதலில் "பாலியல் அறை" திறக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மத்திய உம்ப்ரியா பகுதியில் உள்ள சிறையில் திறக்கப்பட்ட இந்த பாலியல் அறையில் ஒரு கைதி தனது பெண் துணைவியுடன் தனிப்பட்ட நேரத்தை செலவிட அனுமதிக்கப்பட்டார்.

சிறைச்சாலைக்கு வெளியில் இருந்து வரும்போது கைதிகள் தங்களது துணையுடனோ அல்லது கூட்டாளியுடனோ நெருக்கமான சந்திப்புகளை நடத்த உரிமை உண்டு என்பதை உறுதிப்படுத்திய இத்தாலிய அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து இது நடைமுறைக்கு வந்துள்ளது.

ஜனவரி 2024-ல் வெளியிடப்பட்ட தீர்ப்பில் சிறைக் கைதிகள் வாழ்க்கைத் துணையுடனோ அல்லது நீண்ட கால கூட்டாளிகளுடனோ தனிப்பட்ட சந்திப்புகளுக்கு உரிமை பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர்களை கண்காணிக்க சிறை காவலர்கள் யாரும் இருக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் கூறியது.

இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நீதி அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

அதில் நெருக்கமான சந்திப்புகளுக்கு அனுமதிக்கப்பட்ட கைதிகளுக்கு படுக்கை மற்றும் கழிப்பறையுடன் கூடிய தனி அறை வழங்கப்பட வேண்டும். இது இரண்டு மணி நேரம் வரை திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

முதன் முதலில் திறக்கப்பட்ட இந்த பாலியல் அறையில் ஒரு கைதி தனது துணையுடன் நேரத்தை செலவிட்டார். இதுகுறித்து உம்ப்ரியா குறைதீர்ப்பாளரான கியூசப் கபோரியோ கூறுகையில்,

பரிசோதனை நன்றாக முடிந்தது. அடுத்த சில நாட்களில் மற்ற சந்திப்புகள் இருக்கும் என்ற சிறையில் நடந்த முதல் நெருக்கமான சந்திப்பு குறித்து கூறினார். பின்னர் சம்பந்தப்பட்ட மக்களை பாதுகாக்க அதிகபட்ச தனியரிமையை பாதுகாப்பது அவசியம் என்றும் கூறினார்.

Vikatan Weekly Quiz: விவாதப்பொருளான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு டு ஐபிஎல்; இந்த வார கேள்விகள்!

விவாதப்பொருளான உச்ச நீதிமன்றம் பயன்படுத்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு, அடுத்த இந்திய தலைமை நீதிபதி, தொடங்கிய மீன்பிடித் தடைக்கலாம், ஐ.பி.எல், சூர்யாவின் ரெட்ரோ திரைப்பட டிரெய்லர் ரிலீஸ் எனப் பல நிக... மேலும் பார்க்க

"இறைச்சி சாப்பிடுபவர்கள் அசுத்தமானவர்கள்" -மராத்தியர் vs குஜராத்தியர் ஆக மாறிய தகராறு; பின்னணி என்ன?

மும்பையில் அடிக்கடி மராத்தியர் மற்றும் குஜராத்தியர் இடையே சிறு சிறு தகராறு ஏற்படுவதுண்டு. குஜராத்தியர்கள் வசிக்கும் கட்டிடங்களில் மராத்தியர்களுக்கு வீடு விற்பனை செய்வது கிடையாது.அப்படியே இரு தரப்பினரு... மேலும் பார்க்க

மனித விந்தணுக்களுக்கு இடையே நடைபெறும் பந்தயம் - இந்த `Sperm Race’ எப்படி நடத்தப்படுகிறது தெரியுமா?

உலகில் முதன்முறையாக விந்தணுக்களுக்கு இடையே பந்தயம் நடைபெற உள்ளது. இந்த வழக்கத்திற்கு மாறான ரேஸில் மனிதர்கள் கலந்து கொள்ளப் போவதில்லை, விந்தனுக்கள் தான் ஈடுபடுகின்றன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்... மேலும் பார்க்க

`இது என் தாயார் விருப்பம்’ - 60 வயதில் கட்சி பெண் நிர்வாகியை மணந்த பாஜக மூத்த தலைவர்

மேற்கு வங்க மாநில முன்னாள் பா.ஜ.க தலைவராக இருப்பவர் திலிப் கோஷ். மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பா.ஜ.க-வை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்த பெருமை திலிப் கோஷிற்கு உண்டு. 60 வயதாகும் திலிப் கோஷ் தனது ச... மேலும் பார்க்க

`அவருடன்தான் வாழ்வேன்’ - கைகொடுக்காத 12 மணிநேர கவுன்சிலிங்; வருங்கால மருமகனுடன் சென்ற பெண்

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரை சேர்ந்தவர் சப்னா தேவி. இவரின் மகளுக்கு கடந்த 16ம் தேதி திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த 8-ம் தேதி சப்னா தேவி தனது மகள் திருமணம் செய்ய இருந்த எதிர்... மேலும் பார்க்க