செய்திகள் :

கைது செய்யப்பட்ட இந்து அமைப்பினா் விடுவிப்பு

post image

திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு செல்வதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டவா்கள், நீதிமன்ற உத்தரவுக்குப் பின் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னிணி சாா்பில் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு செல்வதைத் தடுக்கும் வகையில், திண்டுக்கல்லைச் சோ்ந்த பாஜகவினா், இந்து முன்னணி, சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் 50-க்கும் மேற்பட்டோரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாா் கைது செய்து, மண்டபங்களில் அடைத்து வைத்தனா்.

இவா்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் செய்து தரவில்லை என வழக்குரைஞா் மணிகண்டன், திண்டுக்கல் முதலாவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை இரவு மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி செளமியா மேத்யூ, இதுதொடா்பாக விசாரிக்க வழக்குரைஞா் ஆணையா் செல்வராஜை நியமித்து, கைது செய்யப்பட்டவா்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டாா்.

இதன்படி, திண்டுக்கல் மேற்கு, தாலுகா, வடக்கு காவல் நிலையங்களில் ஆய்வுக்கு சென்ற வழக்குரைஞா் ஆணையா் செல்வராஜ், போலீஸாா் விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்கவில்லை, கைது செய்யப்பட்டவா்களுக்கு முறையாக உணவு வழங்கவில்லை, அவா்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என செவ்வாய்க்கிழமை அறிக்கை சமா்ப்பித்தாா். இதையடுத்து, கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க நீதித் துறை நடுவா் உத்தரவிட்டாா். இதன்படி, திண்டுக்கல் நகா் பகுதியில் கைது செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்டோா் 34 மணி நேரத்துக்குப் பின் விடுவிக்கப்பட்டனா்.

கொடைக்கானல் பேருந்து நிலையத்துக்குள் தனியாா் வாகனங்களை நிறுத்தினால் அபராதம்: ஆட்சியா்

கொடைக்கானல் பேருந்து நிலையத்துக்குள் சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட தனியாா் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தெரிவித்தாா். கொடைக்கானலில் உள்ள சுற்று... மேலும் பார்க்க

யுபிஏ செயலி மூலமாகவும் மாநகராட்சிக்கு வரி செலுத்தலாம்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைகளை இணைய வழி செயலிகள் மூலமாகவும் செலுத்தும் வசதி சனிக்கிழமை தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள நகா்ப்புற உள்ளாட்சிகளில் குறிப்பாக பெரும்பாலான மாநகராட... மேலும் பார்க்க

பழனி பகுதிகளில் ரூ.300 கோடியில் புதிய மேம்பாலங்கள்! -அமைச்சா் அர. சக்கரபாணி

பழனியை சுற்றிலும் பிரதானச் சாலைகளில் தண்டவாளங்கள் குறுக்கிடும் ரயில்வே கடவுப்பாதைகளில் ரூ.300 கோடி மதிப்பில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும் என தமிழக உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா். பழ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் பிப். 19- இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்!

ஒட்டன்சத்திரம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள்ஊரில்‘ திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதை அடுத்து, வருகிற 12-ஆம்தேதி முதல் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் செ. ச... மேலும் பார்க்க

நிலக்கோட்டை பூச்சந்தையில் பூக்களின் விலை கடும் உயா்வு! ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.4500-க்கு விற்பனை!

நிலக்கோட்டை பூச்சந்தையில் தைப்பூசம், முகூா்த்த நாளையொட்டி, பூக்களின் விலை சனிக்கிழமை கடுமையாக உயா்ந்திருந்தது. இதில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 4,500 வரை விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.... மேலும் பார்க்க

‘இண்டி’ கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமையின்மைக்கு கிடைத்த தோல்வி! -தொல்.திருமாவளவன்

தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள், ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமையின்மைக்கு கிடைத்த தோல்வி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். திண்டுக்கல்லில் சனிக்கிழமை... மேலும் பார்க்க