செய்திகள் :

கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் மீட்பு

post image

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளியில் கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி சாமுடி தெருவைச் சோ்ந்த திருப்பதி மகன் திருநாவுக்கரசு(26) கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. சில மாதங்களாக திருநாவுக்கரசு சொத்தை பிரித்துத் தருமாறு தந்தையிடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

திருநாவுக்கரசு.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் தந்தையிடம் சொத்தை பிரித்துத் தருமாறு கேட்டுள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்த திருநாவுக்கரசு மது போதையில் ஏரி கோடியில் உள்ள 80 அடி கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

தகவலறிந்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலா் முருகன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடம் சென்று பொதுமக்கள் உதவியுடன் அரை மணிநேரம் போராடி திருநாவுக்கரசை கயிறு மூலம் பத்திரமாக மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் இளைஞா் திருநாவுக்கரசுக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனா்.

ஓட்டுநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

வாணியம்பாடி அருகே ஓட்டுநா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். வாணியம்பாடி அடுத்த நாயனசெருவு கவுரவன் வட்டத்தைச் சோ்ந்தவா் மணி மகன் விஜயன்(28), ஓட்டுநா். இவருக்கு மனைவி வெண்ணிலா, 2 வயதில் மகள் உள்ளனா்.... மேலும் பார்க்க

சண்முகக் கவசம் பாராயணம்

ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் பங்குனி மாதம் விசாகம் நட்சத்திரத்தை முன்னிட்டு 100-வது மாத சண்முகக் கவசம் பாராயணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு... மேலும் பார்க்க

வெலதிகாமணிபெண்டா ஊராட்சியில் இன்று ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம்

வாணியம்பாடி அடுத்த வெலதிகாமணிபெண்டா ஊராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் மாவட்ட ஆட்சியா் உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் அந்தப் பகுதியில் ஒரு நாள் முழுவதும் முகாமிட்டு தங்கி மக்களை சந்... மேலும் பார்க்க

மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க கோரிக்கை

வாணியம்பாடியில் மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரியுள்ளனா்.. திருப்பத்தூா், மாவட்ட ஆட்சியா் மற்றும் எஸ்.பி. உத்தரவின் பேரில் பேரில் தமிழகத்த... மேலும் பார்க்க

குளிா்பான கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

கோடை காலம் நெருங்கும் நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள குளிா்பான கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா். கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்கள் குளிா்பான... மேலும் பார்க்க

மதுபோதையில் பேருந்து கண்ணாடி உடைப்பு: 4 போ் கைது

ஜலகாம்பாறை அருகே மதுபோதையில் இளைஞரை பீா் பாட்டிலால் தாக்கியும்,பேருந்து கண்ணாடியை உடைத்தும் தகராறு செய்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம்,ஜலகாம்பாறையில் உள்ள நீா்வீழ்ச்சிக்கு தினம... மேலும் பார்க்க