செய்திகள் :

``கை என்றுமே நம்மை விட்டு விட்டுப் போகாது'' - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

post image

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீராச்சாமி மகன் ஸ்ரீகாந்த் - மணமகள் பிரியதர்ஷினி ஆகியோர் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.

பின் திருமண நிகழ்ச்சி மேடையில் பேசும்போது, “இந்த திருமணத்தை நடத்தி வைப்பதில் பெருமை அடைகிறேன். வீராசாமி அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நேற்று மாலையிலிருந்து பல்வேறு நிகழ்ச்சிக்கு எங்கு சென்றாலும் எழுச்சி வரவேற்பு உள்ளது.

திருமண விழாவில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்
திருமண விழாவில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்

இந்த திருமண விழா அரங்கிற்கு வாகனத்தில் இருந்து வரும்போது கூட எழுச்சியையும், அன்பையும் பார்த்துவிட்டுதான் வந்தேன்.

முழுதாக மேடைக்கு வந்து செல்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என்னுடைய கைகளுடன் இந்த நிகழ்ச்சி மேடைக்கு நான் வருவேனா என்ற சந்தேகம் இருந்தது.

கை நம்மை விட்டுப் போகாது. நான் என்னுடைய கையை கூறினேன். உங்கள் மேல் உள்ள நம்பிக்கையை கூறினேன்.

பாஜகவுக்கு ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி என்ற அடிமை சிக்கி உள்ளார். இன்று அந்த அடிமை பத்தவில்லை என்று புது அடிமை கிடைக்குமா? என பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

புது அடிமை நிச்சயமாக கிடைப்பார்கள். ஆனால், எத்தனை அடிமைகள் ஒன்றாக சேர்ந்து வந்தாலும் கடைசி திமுக தொண்டர் இருக்கும்வரை பாஜக தமிழ்நாட்டில் காலடி வைக்க முடியாது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆரை மறந்துவிட்டார்!

எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆரை மறந்துவிட்டார். நீலகிரி நிகழ்ச்சியில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் அவருக்கு மாலை அணிவித்த பின் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்ததாக கூறுகிறார்.

கீழே இருக்கும் தொண்டன் கூறுகிறான் அது எம்ஜிஆர் சிலை என்று. எடப்பாடிக்கு அமித் ஷா முகம் மட்டுமே நினைவில் இருக்கிறது.

இந்த திருமண மணமக்களுக்கு மட்டுமல்லாமல் முதல்வர் எங்கு சென்றாலும் கூறுவது உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்கவும் என்பதே" என பேசினார்

Modi: "நண்பர் ட்ரம்ப்பிடம் பேசினேன்" - மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தையா?

பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் பேசியதாகவும், 2 ஆண்டுகளுக்கு மேல் நடக்கும் இஸ்ரேல் - காசா போரை நிறுத்தும் வரலாற்று அமைதித்திட்டத்தின் வெற்றிக்காக அவரை வாழ்த்தியதாகவும் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

பி.ஆர் கவாய்: "அதிர்ச்சிக்கு உள்ளானோம்" - காலணி வீசிய சம்பவம் குறித்து நீதிபதி சொல்வதென்ன?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது கடந்த அக்டோபர் 6 (திங்கட்கிழமை) வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசி தாக்க முயன்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை எழுப்பியது. அது தனக்கு மிகவும் அதிர்ச்ச... மேலும் பார்க்க

பீகார் தேர்தல்: வழக்கறிஞர்கள், டாக்டர்கள், அரசு அதிகாரிகள்; வேட்பாளர்களை அறிவித்த பிரசாந்த் கிஷோர்

பீகார் சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் முதல் முறையாக போட்டியிட இருக்கிறார். இதற்காக அவர் ஜன் சூரஜ் என்ற கட்சியை தொடங்கி தேர்தல... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நகரங்களின் பெயர்களை உணவுகளுக்கு வைத்து சாப்பிட்ட இந்திய விமானப்படை - மெனு வைரல்!

இந்திய விமானப்படையின் 93வது ஆண்டு விழாவில் வழங்கப்பட்ட இரவு விருந்தின் மெனு வைரலாகி வருகிறது. வழக்கமான விருந்து உணவுகள் என்றால் அதற்கு வித்தியாசமாக பெயரிட்டு கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்த விருந்து எந்த ... மேலும் பார்க்க

தாலிபன்: இந்தியாவில் ஆப்கன் அமைச்சர்; கொடியில் குழப்பம் - வருகையின் பின்னணி என்ன?

ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டின் தாலிபன் அமைச்சர் அமிர் கான் முத்தாகி டெல்லி வந்தடைந்துள்ளது பிராந்திய அரசியலில் முக்கியமான தருணமாக பார்ப்படுகிறது. ஐநாவின் பாதுகாப்பு கவ... மேலும் பார்க்க

`ஸ்டார்ட்அப் வளர்ச்சிக்காக ரூ.100 கோடியில் திட்டம்’ - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட் அப் நிறுவனம் சார்பில் சர்வதேச மாநாடு கோவை கொடிசியா வர்த்தக வளாத்தில் நடைபெற்றது. இன்றும், நாளையும் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில... மேலும் பார்க்க