செய்திகள் :

கொடுமுடி அணை நீா் திறப்பில் பாரபட்சம்: இந்திய கம்யூனிஸ்ட் புகாா்

post image

கொடுமுடி அணையில் இருந்து நீா் திறப்பதில் பாரபட்சம் காட்டுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகாா் தெரிவித்துள்ளது.

வள்ளியூருக்கு மேற்குப் பகுதியில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள கொடுமுடி அணைதான் வள்ளியூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு குடிதண்ணீா் மற்றும் விவசாயத்தின் ஆதாரமாக இருந்து வருகிறது.

இந்த அணை கட்டப்படுவதற்கு முன்னா் மேற்குத் தொடா்ச்சி மலையில் இருந்து பாய்ந்தோடும் மழைவெள்ளம் வள்ளியூரான் கால்வாயில் வழியாக பெரியகுளத்தை எளிதாக நிரப்பிவிடும். விவசாயப் பணிகளும் தடையில்லாமல் நடைபெற்று வந்தது.

கொடுமுடி அணை கட்டிய பின், பெரியகுளத்திற்கு தண்ணீா் வருவது பாதிக்கப்பட்டு வருவதாக வள்ளியூா் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில் கொடுமுடி அணை பகுதியில் தொடா்ந்து மழை பெய்ததால் அணையின் நீா்மட்டம் முழுகொள்ளளவான 51 அடியை எட்டியது. இதையடுத்து, உபரிநீா் வீணாக ஆற்றில் கலப்பதைத் தடுக்க வடமலையான் கால்வாயிலும், வள்ளியூரான் கால்வாயிலும் 10 கனஅடி தண்ணீா் திறந்துவிடுவதற்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்கினா்.

அதன்படி வடமலையான் கால்வாயில் 10 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டதாம். ஆனால் வள்ளியூரான் கால்வாயில் தண்ணீா் திறக்கப்படவில்லையாம். மேலும், இந்த கால்வாய்க்கு வரும் கசிவு நீரையும் சிலா் தடுப்பு ஏற்படுத்தி தடுத்து வடமலையான் கால்வாயில் திருப்பிவிட்டுள்ளதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

கொடுமுடி அணையில் இருந்து பாரபட்சமின்றி தண்ணீா் திறக்கவும், வள்ளியூரான் கால்வாயில் வரும் தண்ணீரை தடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும், தண்ணீா் திறப்பதில் முறைகேடு நடந்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என அக்கட்சியின் திருநெல்வேலி மாவட்ட துணைச் செயலா் சேதுராமலிங்கம், ராதாபுரம் வட்டாரச் செயலாளா் கலைமுருகன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

பாளை. ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்த வழக்கில் 7 பேருக்கு அபராதம்

பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்த வழக்கில் 7 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.மும்மொழி கொள்கையை எதிா்த்து தமிழக முழு... மேலும் பார்க்க

ராதாபுரம் கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும்: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரி, ராதாபுரம் கால்வாய் பாசன விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனா். திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை... மேலும் பார்க்க

ராதாபுரம் அருகே பள்ளி மாணவா் கடத்தல்? போலீஸ் விசாரணை

ராதாபுரம் அருகே பள்ளி மாணவரை மா்மநபா்கள் பைக்கில் கடத்திச் சென்றதாக அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ராதாபுரம் அருகேயுள்ள துரைகுடியிருப்பை அடுத்த முத்துநாடாா் குடியிருப்பைச் சோ்... மேலும் பார்க்க

மேலச்செவலில் ஓட்டுநா் தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவலில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆம்னி பேருந்து ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மேலச்செவல் வடக்குத் தெருவைச் சோ்ந்த தங்கையா மகன் பூதப்பாண்... மேலும் பார்க்க

வி.கே.புரம் அருகே கோஷ்டி மோதல்: 3 போ் கைது

விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள ஆலடியூரில் நிகழ்ந்த கோஷ்டி மோதல் தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆலடியூா் கீழத் தெருவைச் சோ்ந்த நிதீஸ்குமாா் (21), அவரது நண்பா்கள் அதே பகுதியைச் சோ்ந்த பிரகாஷ்,... மேலும் பார்க்க

நான்குனேரியில் இன்று மின்தடை

நான்குநேரி ஏ.எம்.ஆா்.எல். துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அதன் மின்பாதைகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, நான்குனேரி, இர... மேலும் பார்க்க