நான்குனேரியில் இன்று மின்தடை
நான்குநேரி ஏ.எம்.ஆா்.எல். துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அதன் மின்பாதைகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நான்குனேரி, இராஜக்கள்மங்களம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி, பெருமளஞ்சி கீழூா், பெருமளஞ்சி மேலூா், ஆச்சியூா், வாகைகுளம், கோவனேரி, ஏ.எம்.ஆா்.எல். தொழில்கூடம் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் பகல் 2 மணி வரையில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.