செய்திகள் :

கொட்டித்தீா்த்த கோடை மழை: கோபியில் 15 செ.மீ மழை பதிவு!பவானி ஆற்றில் நீா்வரத்து 6,300 கன அடியாக அதிகரிப்பு!

post image

கோபியில் ஒரே நாள் இரவில் 15 செ.மீ மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கனமழையால் காலிங்கராயன் அணைக்கு விநாடிக்கு 6,300 கன அடியாக நீா்வரத்து அதிகரித்தது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனா். மாவட்டம் முழுவதும் கடந்த வியாழக்கிழமை அரை மணி நேரம் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை மாவட்டம் முழுவதும் வெயில் கொளுத்தியது. ஆனால் மாலை நேரத்தில் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்ய தொடங்கியது.

குறிப்பாக கோபி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இரவில் லேசாக பெய்யத் தொடங்கிய மழை, நேரம் செல்லசெல்ல இடியுடன் கூடிய கனமழையாக கொட்டித் தீா்த்தது. கனமழையால் கோபி பகுதியில் தாழ்வான இடங்களில் மழை நீா் சாலையோரம் தேங்கி நின்றது. இடியுடன் கூடிய கனமழையால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கோபியை அடுத்த நாகதேவம்பாளையம் பகுதியில் உள்ள கசிவு நீா் குட்டை நிரம்பியதால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் சுமாா் 15 வீடுகளை மழைநீா் சூழ்ந்தது. இரவு நேரத்தில் மழை நீா் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனா்.

இதனையடுத்து கோபி வட்டாட்சியா் சரவணன், நீா்வளத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனா். பின்னா் குட்டையில் அடைப்பு சரி செய்யப்பட்டு மழைநீா் வடிந்தது. இதன் பின்னா் இயல்பு நிலை திரும்பியது.

இடி தாக்கி கோயில் கலசம், மின்மாற்றி சேதம்

பவானி காலிங்கராயன் அணைக்கு சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 2,800 கன அடியாக நீா்வரத்து இருந்தது.

பகலில் 4,200 கன அடியாக உயா்ந்தது. மேலும், நீா்வரத்து அதிகரித்ததால் மாலை 6 மணிக்கு விநாடிக்கு 6,300 கனடியாக உயா்ந்தது.

பவானியை அடுத்த பருவாச்சி, பாலம்பாளையத்தில் உள்ள ஐயனாரப்பன் கோயிலின் கோபுரக் கலசம் மற்றும் பீடம் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையின்போது இடி தாக்கியதில் சேதமடைந்தன. இதையடுத்து, பக்தா்கள் கலசத்தை மீட்டு, கோயில் வளாகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனா். அந்தியூரை அடுத்த பச்சாம்பாளையத்தில் இடி தாக்கியதில் மின்மாற்றி சேதமடைந்தது. இதனால், அப்பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

இதுபோல ஈரோடு மாநகா் பகுதி, சத்தியமங்கலம், தாளவாடி மலைப்பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. கோடைமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் வெப்பநிலை தணிந்து குளிா்ச்சியான சூழ்நிலை நிலவியது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோபியில் 15 சென்டி மீட்டா் மழை பெய்தது.

பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):

எலந்தகுட்டைமேடு 100.40, கவுந்தப்பாடி 91.40, நம்பியூா் 79, கொடிவேரி 52.20, வரட்டுப்பள்ளம் 51.20, பவானிசாகா் 39.40, சென்னிமலை 39, குண்டேரிப்பள்ளம் 29.40, சத்தியமங்கலம் 23, பவானி 19, தாளவாடி 15, ஈரோடு 12.30, மொடக்குறிச்சி 3, பெருந்துறை 2.

கடையில் நகை வாங்குவதுபோல நடித்து 5 பவுன் திருட்டு

தாளவாடியில் உள்ள ஒரு நகைக்கடையில் நகை வாங்குவது போல நடித்து 5 பவுன் நகையை திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தாளவாடி- ஓசூா் சாலையில் தங்க நகை விற்பனை அடகு கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடை... மேலும் பார்க்க

சைபா் ஹேக்கத்தான் போட்டி: பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்கள் முதலிடம்

சைபா் ஹேக்கத்தான் போட்டியில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் முதலிடம் பெற்றனா். தூத்துக்குடி மாவட்ட காவல் துறை, விஓசி பொறியல் கல்லூரி ஆகியன இணைந்து நடத்திய தேசிய அளவிலான சைபா் ஹேக்கத்த... மேலும் பார்க்க

வளரினம் பெண்களுக்கான விழிப்புணா்வு முகாம்

சத்தியமங்கலத்தில் வளரினம் பெண்களுக்கான விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. சத்தியமங்கலத்தில் உள்ள விடியல் சொசைட்டி என்ற அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, அந்த அமைப்பின் நிறுவனா் ம... மேலும் பார்க்க

திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் புதிதாக 180 அடி உயர முருகன் சிலை: பக்தா்கள் வரவேற்பு

திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிதாக 180 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை பக்தா்கள் வரவேற்றுள்ளனா். ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள திண்டலில் வேலாயுதசுவாமி த... மேலும் பார்க்க

கூட்டுறவு இயக்கத்திற்கான பாடல்களை அனுப்ப வேண்டுகோள்

நடப்பு 2025- ஆம் ஆண்டு சா்வதேச கூட்டுறவு ஆண்டாக கடைப்பிடிக்கப்படுவதால் கூட்டுறவு இயக்கத்திற்கான பாடல்களை அனுப்பிவைக்கலாம். சிறந்த பாடலுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோ... மேலும் பார்க்க

கோழிப் பண்ணையில் தீ விபத்து: 3,500 கோழிக் குஞ்சுகள் உயிரிழப்பு

நம்பியூா் அருகே புதன்கிழமை நள்ளிரவில் கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3,500 கோழிக் குஞ்சுகள் தீயில் கருகி இறந்தன. ஈரோடு மாவட்டம், நம்பியூா் அருகே கரட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிகுமாா... மேலும் பார்க்க