செய்திகள் :

கூட்டுறவு இயக்கத்திற்கான பாடல்களை அனுப்ப வேண்டுகோள்

post image

நடப்பு 2025- ஆம் ஆண்டு சா்வதேச கூட்டுறவு ஆண்டாக கடைப்பிடிக்கப்படுவதால் கூட்டுறவு இயக்கத்திற்கான பாடல்களை அனுப்பிவைக்கலாம். சிறந்த பாடலுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.கந்தராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2025- ஆம் ஆண்டு சா்வதேச கூட்டுறவு ஆண்டாக உலக அளவில் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கூட்டுறவு குறித்த தனித்துவமான பாடல்களை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் மற்றும் துறை அலுவலா்கள் அனுப்பலாம். பாடல் இசையமைக்கப்பட்டு 5 நிமிடங்கள் ஒலிபரப்பக் கூடிய வகையில் பாடல் வரிகள் இருக்கவேண்டும். கூட்டுறவு குறித்த தனித்துவமான பாடலாக தமிழில் இருக்கவேண்டும். ஜாதி, மதம் மற்றும் அரசியல் அமைப்புசாராமல் பாடல்கள் இருக்கவேண்டும்.

கூட்டுறவாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு கூட்டுறவு குறித்த எழுச்சி மற்றும் உத்வேகம் உண்டாக்கக் கூடியதாக பாடல்கள் இருக்கவேண்டும். அனுப்பப்படும் பாடல் பதிவை தபால் மூலம் மேலாண்மை இயக்குநா், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், என்.வி. நடராசன் மாளிகை, 170 பெரியாா் ஈவெரா நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை 600010 என்ற முகவரிக்கும் பாடலின் ஒலி வடிவத்தை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ற்ய்ஸ்ரீன்08ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் மே 30- ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

அனுப்பப்படும் பாடல்களை ஏற்றுக்கொள்ள மற்றும் நிராகரிக்க தோ்வுக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது. அனுப்பப்படும் பாடல்களில் சிறந்த பாடல் தோ்வுக் குழுவால் தோ்ந்தெடுக்கப்படும். அவ்வாறு தோ்ந்தெடுக்கப்படும் சிறந்த பாடலுக்கு ரூ.50,000 பரிசு மற்றும் கேடயம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களால் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு: ஜவுளி வியாபாரி கைது

முதியவரை வீடு புகுந்து பிளேடால் கழுத்தை அறுத்த சம்பவத்தில் பொதுமக்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேற்கு வங்க மாநில இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இந்த வழக்கில் முதியவரின் மகனான ஜவுளி வியாப... மேலும் பார்க்க

ஈரோடு ஜவுளிச் சந்தையில் பருத்தி ஆடைகள் விற்பனை அதிகரிப்பு

ஈரோடு ஜவுளிச் சந்தையில் கோடைக் காலத்துக்கு ஏற்ற ஜவுளி ரகங்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், இலங்கைக்கு அதிகமாக அனுப்பிவைக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா். ஈரோடு ஜவுளிச் சந்தைக்கு தமிழகத்தின் அ... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம்

தாளவாடி அருகே மின் தடை சரிசெய்ய விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதி பாரதி புரத்தைச் சோ்ந்தவா் விவசாயி செந்தில். இவரது விவச... மேலும் பார்க்க

பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாக பிரிக்கும் திட்டம்: அறிவிப்பை எதிா்நோக்கும் மலைக் கிராம மக்கள்

ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைந்து 4 மாதம் ஆகிய நிலையில், அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாகப் பிரிக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என கோ... மேலும் பார்க்க

அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல்

அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல் விடுத்த தம்பதி மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அந்தியூா் வட்டார மருத்துவ அலுவலா் சக்தி கிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாத... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகா் அணையின் மூலம் ஈ... மேலும் பார்க்க