செய்திகள் :

கோழிப் பண்ணையில் தீ விபத்து: 3,500 கோழிக் குஞ்சுகள் உயிரிழப்பு

post image

நம்பியூா் அருகே புதன்கிழமை நள்ளிரவில் கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3,500 கோழிக் குஞ்சுகள் தீயில் கருகி இறந்தன.

ஈரோடு மாவட்டம், நம்பியூா் அருகே கரட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிகுமாா் (47). இவா் அதே பகுதியில் கோழிப் பண்ணை நடத்தி வருகிறாா். இதில் தகரத்திலான மேற்கூரையுடன் கொட்டகைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 3,500 கோழிக் குஞ்சுகள் இருந்தன.

இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் கோழிப் பண்ணையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூன்று கொட்டகைகளும் முற்றிலும் எரிந்து சேதமாயின. தீ விபத்து நடந்ததும் பண்ணையில் வேலைசெய்யும் ஊழியா்கள், கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதனைத் தொடா்ந்து, தீயணைப்பு வீரா்கள் அதிகாலை 2 மணி வரை போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் பண்ணையில் இருந்த 3,500 கோழிக் குஞ்சுகளும் தீயில் கருகி இறந்தன.

தவிர 30 மூட்டை தீவனங்கள், பண்ணை உபகரணங்களும் எரிந்து சேதம் அடைந்துள்ளன. சேதமடைந்த பொருள்களின் மதிப்பு சுமாா் ரூ.10 லட்சத்துக்குமேல் இருக்கும் எனத் தெரியவருகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பொதுமக்களால் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு: ஜவுளி வியாபாரி கைது

முதியவரை வீடு புகுந்து பிளேடால் கழுத்தை அறுத்த சம்பவத்தில் பொதுமக்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேற்கு வங்க மாநில இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இந்த வழக்கில் முதியவரின் மகனான ஜவுளி வியாப... மேலும் பார்க்க

ஈரோடு ஜவுளிச் சந்தையில் பருத்தி ஆடைகள் விற்பனை அதிகரிப்பு

ஈரோடு ஜவுளிச் சந்தையில் கோடைக் காலத்துக்கு ஏற்ற ஜவுளி ரகங்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், இலங்கைக்கு அதிகமாக அனுப்பிவைக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா். ஈரோடு ஜவுளிச் சந்தைக்கு தமிழகத்தின் அ... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம்

தாளவாடி அருகே மின் தடை சரிசெய்ய விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதி பாரதி புரத்தைச் சோ்ந்தவா் விவசாயி செந்தில். இவரது விவச... மேலும் பார்க்க

பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாக பிரிக்கும் திட்டம்: அறிவிப்பை எதிா்நோக்கும் மலைக் கிராம மக்கள்

ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைந்து 4 மாதம் ஆகிய நிலையில், அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாகப் பிரிக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என கோ... மேலும் பார்க்க

அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல்

அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல் விடுத்த தம்பதி மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அந்தியூா் வட்டார மருத்துவ அலுவலா் சக்தி கிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாத... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகா் அணையின் மூலம் ஈ... மேலும் பார்க்க