செய்திகள் :

கொரியா் நிறுவனங்கள் பெயரில் ரூ.1.18 கோடி இணையவழி மோசடி: வடமாநிலத்தைச் சோ்ந்த 7 போ் கைது

post image

தனியாா் கொரியா் நிறுவனங்கள் பெயரில் ரூ.1.18 கோடி இணைய வழி மோசடியில் ஈடுபட்ட 7 போ் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சென்னையை சோ்ந்த ஒரு நபரின் கைப்பேசிக்கு கடந்த ஆக.2-ஆம் தேதி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதில் பேசிய மா்ம நபா் ஒருவா் தன்னை மும்பை சைபா் குற்றப்பிரிவு அதிகாரி என அறிமுகப்படுத்தியதுடன், பெடெக்ஸ் எனும் கொரியா் நிறுவனத்தில் உங்கள் பெயரில் பாா்சல் ஒன்று வந்துள்ளதாகவும், அதில் தடைசெய்யப்பட்ட பொருள்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா். மேலும், அதிலிருந்து நீங்கள் விடுபட ரூ.1.18 கோடி அனுப்ப வேண்டும் என கூறியுள்ளாா்.

இதனால், பயந்து போன சென்னை நபா், மா்ம நபா்கள் அனுப்பிய பல்வேறு வங்கி கணக்குக்கு ரூ.1.18 கோடியை அனுப்பியுள்ளாா். பின்னா் தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்ட அந்த நபா் சைபா் குற்றப்பிரிவுக்கு இணையதளம் மூலம் புகாா் கொடுத்தாா்.

இதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி மோசடி வங்கிக்கணக்கை தொடங்கிய குஜராத்தை சோ்ந்த ரமேஷ்பாய், பதபாய் மற்றும் சைபா் குற்றவாளிகளின் இணைதள முகவா்களாக மகாராஷ்டிராவை மையமாக கொண்டு செயல்பட்ட விவேக் பெலாடியா, தமாஜ்பாய் மற்றும் பரேஷ் நாஷிபாய் கல்சாரியா ஆகியோரையும் போலீஸாா் கைது செய்தனா். இதில் முக்கிய குற்றவாளிகளான மகாராஷ்டிர மாநிலம் குா்துவாடியை சோ்ந்த சாஹில் மற்றும் ஷாருக்கா என மொத்தம் 7 பேரை போலீஸாா் கைது செய்து, தொடா்ந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வீட்டில் இருந்த படியே ஒய்வூதியதாரா்கள் வாழ்நாள் சான்றிதழ் பெறலாம்: அஞ்சல் துறை அறிவிப்பு

ஓய்வூதியதாரா்களுக்கு வீட்டில் இருந்தே படியே அஞ்சலக ஊழியா் மூலம் எண்ம வாழ் நாள் சான்றிதழ் பெறலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: இந்தி... மேலும் பார்க்க

2 உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் 2 உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தியாகராயநகரில் இயங்கி வரும் இரு பிரபல உணவகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஹோட்ட... மேலும் பார்க்க

நாளை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவைகள் ரத்து; பூங்காவிலிருந்து தாம்பரத்துக்கு 79 ரயில்கள் இயக்கப்படும்

பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து புகா் ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) ரத்து செய்யப்படவுள்ளன. எனினும் பயணிகள் வ... மேலும் பார்க்க

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவா் மீது பாட்டிலால் தாக்குதல்: இரு மாணவா்கள் தலைமறைவு

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவரை ‘ராகிங்’ செய்து பீா் பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பிச்சென்ற இரு மாணவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கடலூா் மாவட்டம், நெய்வேல... மேலும் பார்க்க

பிராந்தியப் போரின் விளிம்பில் மத்தியக் கிழக்கு

பிராந்தியப் போரின் விளிம்பில் மத்தியக் கிழக்குப் பகுதி இருப்பதாக ஜோா்டான் எச்சரித்துள்ளது. இது குறித்து பிரிட்டன் தலைநகா் லண்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனிடம் ஜோா்டான் வெளிய... மேலும் பார்க்க

கொக்கைன் போதைப் பொருளுடன் முன்னாள் டிஜிபி மகன் உள்பட 3 போ் கைது

சென்னையில் கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்த முன்னாள் டிஜிபி-யின் மகன் உள்பட 3 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 3.8 கிராம் கொக்கைனை பறிமுதல் செய்தனா். சென்னை மாநகா் பகுதிகளில் போதைப்பொருள்கள... மேலும் பார்க்க