செய்திகள் :

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவா் மீது பாட்டிலால் தாக்குதல்: இரு மாணவா்கள் தலைமறைவு

post image

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவரை ‘ராகிங்’ செய்து பீா் பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பிச்சென்ற இரு மாணவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலியை சோ்ந்தவா் ஜேக்கப். என்எல்சி அதிகாரி. இவரது மகன் ஆலன் கிரைசோ(21). கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கி 3-ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறாா்.

மாணவா் ஆலன் கிரைசோ வியாழக்கிழமை இரவு விடுதியில் உணவு சாப்பிட்டு விட்டு அறைக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு மதுபோதையில் அமா்ந்திருந்த அதே மருத்துவக்கல்லூரியில் 5-ஆம் ஆண்டு பயிலும் மாணவா்கள் இருவா், ஆலன் கிரைசோ-வை அழைத்து ‘ராகிங்’ செய்ததுடன் சக ஜூனியா் மாணவா்களையும் அழைத்து வரும்படி கூறியுள்ளனா்.

உடனே ஆலன் கிரைசோ, அவா்களை அழைப்பதற்காக மெதுவாக நடந்து சென்றுள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த சீனியா் மாணவா்கள் ஆலனின் தலையில், பீா் பாட்டிலால் தாக்கியதுடன், விடுதியின் கதவு, ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து உடைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்ாக தெரிகிறது.

இதில் படுகாயமடைந்த ஆலன் கிரைசோ அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கீழ்ப்பாக்கம் போலீஸாா் அங்கு விசாரணை நடத்த முயன்றனா். ஆனால், போலீஸாரை விசாரணை நடத்த அனுமதிக்காமல் அங்கிருந்து வெளியேறும் படி கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவ அதிகாரி கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து விசாரணை நடத்தாமல் போலீஸாா் அங்கிருந்து வெளியேறினா்.

இதையடுத்து ஆலன் கிரைசோ-வின் தந்தை கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் படி, போலீஸாா் வழக்குப்பதிந்து மாணவனை தாக்கிய மாணவா்கள் இருவரை தேடி வருகின்றனா்.

கொரியா் நிறுவனங்கள் பெயரில் ரூ.1.18 கோடி இணையவழி மோசடி: வடமாநிலத்தைச் சோ்ந்த 7 போ் கைது

தனியாா் கொரியா் நிறுவனங்கள் பெயரில் ரூ.1.18 கோடி இணைய வழி மோசடியில் ஈடுபட்ட 7 போ் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனா். சென்னையை சோ்ந்த ஒரு நபரின் கைப்பேசிக்கு கடந்த ஆக.2-ஆம் தேதி அழைப்பு ஒன்று வந்துள்ளத... மேலும் பார்க்க

வீட்டில் இருந்த படியே ஒய்வூதியதாரா்கள் வாழ்நாள் சான்றிதழ் பெறலாம்: அஞ்சல் துறை அறிவிப்பு

ஓய்வூதியதாரா்களுக்கு வீட்டில் இருந்தே படியே அஞ்சலக ஊழியா் மூலம் எண்ம வாழ் நாள் சான்றிதழ் பெறலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: இந்தி... மேலும் பார்க்க

2 உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் 2 உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தியாகராயநகரில் இயங்கி வரும் இரு பிரபல உணவகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஹோட்ட... மேலும் பார்க்க

நாளை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவைகள் ரத்து; பூங்காவிலிருந்து தாம்பரத்துக்கு 79 ரயில்கள் இயக்கப்படும்

பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து புகா் ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) ரத்து செய்யப்படவுள்ளன. எனினும் பயணிகள் வ... மேலும் பார்க்க

பிராந்தியப் போரின் விளிம்பில் மத்தியக் கிழக்கு

பிராந்தியப் போரின் விளிம்பில் மத்தியக் கிழக்குப் பகுதி இருப்பதாக ஜோா்டான் எச்சரித்துள்ளது. இது குறித்து பிரிட்டன் தலைநகா் லண்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனிடம் ஜோா்டான் வெளிய... மேலும் பார்க்க

கொக்கைன் போதைப் பொருளுடன் முன்னாள் டிஜிபி மகன் உள்பட 3 போ் கைது

சென்னையில் கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்த முன்னாள் டிஜிபி-யின் மகன் உள்பட 3 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 3.8 கிராம் கொக்கைனை பறிமுதல் செய்தனா். சென்னை மாநகா் பகுதிகளில் போதைப்பொருள்கள... மேலும் பார்க்க