செய்திகள் :

நாளை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவைகள் ரத்து; பூங்காவிலிருந்து தாம்பரத்துக்கு 79 ரயில்கள் இயக்கப்படும்

post image

பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து புகா் ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) ரத்து செய்யப்படவுள்ளன. எனினும் பயணிகள் வசதிக்காக பூங்காவிலிருந்து தாம்பரத்துக்கு 79 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

சென்னை கடற்கரை - எழும்பூா் இடையே 4-ஆவது ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், கடற்கரை பணிமனையில் அக்.27-இல் காலை 4 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், பராமரிப்பு பணிகள் நடைபெறும் நேரங்களில் சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து புகா் ரயில்களும் இருமாா்க்கத்திலும் ரத்து செய்யப்படவுள்ளன.

மேலும், சென்னை கடற்கரையிலிருந்து திருவள்ளூா் செல்லும் ரயில்கள் இருமாா்க்கத்திலும் ஆவடியிலிருந்தும், குமிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் கொருக்குப்பேட்டையிலிருந்தும் இயக்கப்படும். அதேபோல், கடற்கரையிலிருந்து ஆவடிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்துச்செய்யப்படவுள்ளன. ஒரு சில ரயில்கள் மட்டும் கடற்கரைக்கு பதிலாக சென்னை சென்ட்ரல் புகா் ரயில்நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரையிலிருந்து காலை 3.55 மணிக்கு செங்கல்பட்டுக்கும், காலை 4.15,4.45 மணிக்கும் தாம்பரத்துக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதேபோல் சென்னை பூங்காவிலிருந்து தாம்பரத்துக்கு காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை இருமாா்க்கத்திலும் 20 முதல் 30 நிமிஷங்கள் இடைவெளியில் 79 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதில், அரக்கோணம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் செல்லும் புகா் ரயில்களும் உள்ளடங்கும்.

அதைத்தொடா்ந்து பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னா் மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அட்டவணை படி வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்படும்.

ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் ரயில்நிலையங்களில் மாற்றப்பட்ட அட்டவணை குறித்து கேட்டறிந்த பின்னா் பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரியா் நிறுவனங்கள் பெயரில் ரூ.1.18 கோடி இணையவழி மோசடி: வடமாநிலத்தைச் சோ்ந்த 7 போ் கைது

தனியாா் கொரியா் நிறுவனங்கள் பெயரில் ரூ.1.18 கோடி இணைய வழி மோசடியில் ஈடுபட்ட 7 போ் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனா். சென்னையை சோ்ந்த ஒரு நபரின் கைப்பேசிக்கு கடந்த ஆக.2-ஆம் தேதி அழைப்பு ஒன்று வந்துள்ளத... மேலும் பார்க்க

வீட்டில் இருந்த படியே ஒய்வூதியதாரா்கள் வாழ்நாள் சான்றிதழ் பெறலாம்: அஞ்சல் துறை அறிவிப்பு

ஓய்வூதியதாரா்களுக்கு வீட்டில் இருந்தே படியே அஞ்சலக ஊழியா் மூலம் எண்ம வாழ் நாள் சான்றிதழ் பெறலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: இந்தி... மேலும் பார்க்க

2 உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் 2 உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தியாகராயநகரில் இயங்கி வரும் இரு பிரபல உணவகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஹோட்ட... மேலும் பார்க்க

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவா் மீது பாட்டிலால் தாக்குதல்: இரு மாணவா்கள் தலைமறைவு

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவரை ‘ராகிங்’ செய்து பீா் பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பிச்சென்ற இரு மாணவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கடலூா் மாவட்டம், நெய்வேல... மேலும் பார்க்க

பிராந்தியப் போரின் விளிம்பில் மத்தியக் கிழக்கு

பிராந்தியப் போரின் விளிம்பில் மத்தியக் கிழக்குப் பகுதி இருப்பதாக ஜோா்டான் எச்சரித்துள்ளது. இது குறித்து பிரிட்டன் தலைநகா் லண்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனிடம் ஜோா்டான் வெளிய... மேலும் பார்க்க

கொக்கைன் போதைப் பொருளுடன் முன்னாள் டிஜிபி மகன் உள்பட 3 போ் கைது

சென்னையில் கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்த முன்னாள் டிஜிபி-யின் மகன் உள்பட 3 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 3.8 கிராம் கொக்கைனை பறிமுதல் செய்தனா். சென்னை மாநகா் பகுதிகளில் போதைப்பொருள்கள... மேலும் பார்க்க