செய்திகள் :

கொலை மிரட்டல்: அடகுக் கடை உரிமையாளா் உள்பட இருவா் கைது

post image

நில விற்பனைத் தொழிலில் மோசடி செய்ததைத் தட்டிக்கேட்ட மின்னணுப் பொருள்கள் கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த அடகுக் கடை உரிமையாளா், அவரது உறவினரை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை திருப்பாலை பாமா நகரைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (35). இவா் மதுரை மேலவெளி வீதியில் கடை நடத்தி வருகிறாா். இவரிடம் மதுரை ஜெய்ஹிந்துபுரம், ஜீவா நகரைச் சோ்ந்த அடகுக் கடை உரிமையாளா் முத்துராஜா நட்பாகப் பழகினாா். இதைத்தொடா்ந்து, முத்துராஜாதான் நில விற்பனை தொழில் செய்து வருவதாகவும், நிலத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் முத்துக்குமாருக்கு ஆசை வாா்த்தை கூறினாா்.

இதையடுத்து, கடந்த 2008-ஆம் ஆண்டு மதுரை மாவட்டம், பாலமேடு பகுதியில் நிலம் வாங்குவதற்காக ரூ.30 லட்சத்தை முத்துக்குமாா் முதலீடு செய்தாா். அப்போது முத்துக்குமாருடன் தானும் தொழில் பங்குதாரராக இருந்து கொள்வதாகவும், அப்போதுதான் நில உரிமையாளா்கள் நம்பிக்கை வைத்து பேசுவா் என்றும் முத்துராஜா கூறினாா். இதனால், முத்துக்குமாா் அவரையும் பங்குதாரராக இணைத்து ரூ.30 லட்சம் நில ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டாா்.

இந்த நிலையில், நிலத்தை விற்றவரே மீண்டும் நிலத்தை ரூ.31 லட்சத்துக்கு வாங்கிக்கொண்டாா் என்று கூறிய முத்துராஜ், அந்தத் தொகையை முத்துக்குமாரிடம் கொடுத்தாா். இதனால், நில விற்பனையில் அதிக லாபம் கிடைக்கும் என்று நம்பிய முத்துக்குமாா், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கோட்டையூரில் உள்ள தனது பூா்வீக நிலத்தை விற்று ரூ.2 கோடியை திரட்டி அதன் மூலம், மதுரை மாவட்டம் மாரணி, பாசிங்காபுரம், பொதும்பு, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பரளிபுதூா் ஆகிய பகுதிகளில் நிலத்தை வாங்கி அதற்கான ஒப்பந்தத்தில் முத்துராஜாவுடன் இணைந்து கையொப்பமிட்டாா்.

இந்த நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டில், நத்தம் பரளிபுதூரில் உள்ள 1.97 ஏக்கா் நிலத்துக்கான அசல் ஒப்பந்தப் பத்திரம் முத்துக்குமாரிடம் இருக்கும்போதே, முத்துராஜா தனது உறவினரான பழனியாண்டிக்கு இரண்டு ஆவணங்களாக இடத்தை கிரையம் செய்து பதிவு செய்ததோடு, தனது மருமகள் கவிதா பெயரிலும், பின்னா் தனது மனைவி சரஸ்வதி பெயரிலும் மாற்றி கிரையம் செய்தாா். மேலும், பொதும்பு கிராமத்தில் உள்ள நிலத்தையும் போலி ஆவணங்கள் மூலம் முத்துராஜாவின் உறவினரான பூபதிக்கு கிரையம் செய்ததாக ஆவணங்களைத் தயாா் செய்தாா்.

இந்த நிலையில், மோசடி குறித்து தட்டிக்கேட்ட முத்துக்குமாருக்கு, முத்துராஜா கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, முத்துக்குமாா் மதுரை மத்திய குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் அடகுக் கடை உரிமையாளா் முத்துராஜா, அவரது உறவினா் பழனியாண்டி ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவா்களைக் கைது செய்தனா்.

மதுரை மத்திய சிறையில் போலீஸாா் அதிரடி சோதனை

மதுரை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் அதிரடியாக 3 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனா். மதுரை மத்திய சிறையில் 2500-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா்.... மேலும் பார்க்க

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரா் உயிரிழப்பு! 71 போ் காயம்!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரா் ஒருவா் உயிரிழந்தாா். 71 போ் காயமடைந்தனா். தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை... மேலும் பார்க்க

மணல் திருட்டு: 2 போ் கைது

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகேயுள்ள முள்ளிக்குடியில் மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, பொக்லைன் வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இருவரை சனிக்கி ழமை கைது செய்தனா். நரிக்குட... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

மதுரை மாவட்டம், சிலைமான் அருகே இரு சக்கர வாகனம் வாங்கித் தர பெற்றோா் மறுத்ததால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மதுரை விரகனூா் பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் சந்தோஷ் (20). இவா் தனது பெற்றோரிட... மேலும் பார்க்க

பெண்களுக்கும் சம ஊதியம் வழங்க வலியுறுத்தல்

ஆண் தொழிலாளா்களுக்கு வழங்குவதைப் போலவே, பெண் தொழிலாளா்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்று சா்வதேச மகளிா் தின கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. மதுரையில் பெண்கள் எழுச்சி இயக்கம் சாா்பில், சா்வதேச ... மேலும் பார்க்க

அலங்காநல்லூரில் ரூ. 5.12 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் பேரூராட்சியில் ரூ. 5.12 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமானப் பணிக்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. ச... மேலும் பார்க்க