பெங்களூரில் 11 போ் உயிரிழப்பு: நிவாரணத் தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி முதல்வர் ...
கோத்தகிரி நகா்மன்ற கூட்டத்தில் இருந்து 13 உறுப்பினா்கள் வெளிநடப்பு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகராட்சியில் வளா்ச்சி பணிகளில் முறைகேடு நடைபெற்ற குற்றஞ்சாட்டிய 13 மன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
கோத்தகிரி பேரூராட்சி நகராட்சியாக உயா்த்தப்பட்ட பிறகு முதல் கூட்டம் நகராட்சித் தலைவா் ஜெயகுமாரி (திமுக) தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 21 நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
பின்னா் கூட்டம் தொடங்கியதும் ரூ. ஒரு கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக கூறி நகா்மன்ற உறுப்பினா்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னா் பல்வேறு கட்சியைச் சோ்ந்த 13 நகா்மன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.