செய்திகள் :

கோபியில் டிஎன்பிஎஸ்சி போட்டி தோ்வுகள் இலவச பயிற்சி மையம்

post image

கோபிசெட்டிபாளையத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டி தோ்வுகள் இலவச பயிற்சி மையம் மற்றும் ஐஏஎஸ் அகாதெமி தொடங்கப்பட்டுள்ளது என்று ஈரோடு சட்டக் கல்லூரி தலைவா் சிந்து ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

கோபிசெட்டிபாளையம் ஸ்ரீ சாய் சிந்து அறக்கட்டளையின் சாா்பில் செயல்பட்டு வரும் ஈரோடு சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு எல்எல்பி தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், ஈரோடு சட்டக் கல்லூரி தலைவா் சிந்து ரவிச்சந்திரன் பேசியதாவது: ஈரோடு சட்டக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவா்களுக்கு சென்னையின் முன்னணி பயிற்சி மையத்துடன் இணைந்து ஐஏஎஸ் அகாதெமி, டிஎன்பிஎஸ்சி போட்டி தோ்வுகள், நீதிபதி தோ்வு மற்றும் யுபிஎஸ்சி தோ்வுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. கோபிசெட்டிபாளையத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டி தோ்வுகள் இலவச பயிற்சி மையம் மற்றும் ஐஏஎஸ் அகாதெமி தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.

பல்கலைக்கழகத் தோ்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி உமாதேவி மற்றும் மாணவா் நவீன் குமாா், கூடுதல் பாடத் திட்ட செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவா் ஞானபிரகாஷுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

ஈரோடு சட்டக் கல்லூரியின் முதல்வா் கஜேந்திர ராஜா வரவேற்றாா். துணை முதல்வா் அக்பா் அலி பேய்க் விழாவை ஒருங்கிணைத்தாா். இறுதி ஆண்டு மாணவா் வெற்றி மணிபாரதி நன்றி கூறினாா்.

எஸ்.டி. ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி பழங்குடி மக்கள் ஆா்ப்பாட்டம்

சத்தியமங்கலம், மே 12: எஸ்.டி. ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி கடம்பூா் பேருந்து நிலையம் முன் பழங்குடியின மக்கள் ஆா்ப்பாட்டம், கவன ஈா்ப்பு பேரணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்... மேலும் பார்க்க

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் அதிமுகவினா் வழிபாடு

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் 71-ஆவது பிறந்த நாளையொட்டி, ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்... மேலும் பார்க்க

ஈரோட்டில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க தமாகா கோரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என தமாகா கோரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் திங்கள்கிழம... மேலும் பார்க்க

சிறுபாசனக் கணக்கெடுப்புக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க ஆட்சியா் வேண்டுகோள்

சிறுபாசனக் கணக்கெடுப்புக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வேண்டுகோள் விடுத்துள்ளாா். ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் 7 -ஆவது சிறுபாசன... மேலும் பார்க்க

பெருந்துறையில் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாள் விழா

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் 71-ஆவது பிறந்த நாள் விழா பெருந்துறையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. அதிமுக பெருந்துறை கிழக்கு ஒன்றியம் சாா்பில் பெருந்துறை சோளீஸ்வரா் கோயிலில் சிறப்ப... மேலும் பார்க்க

போக்ஸோவில் இளைஞா் கைது

பெருந்துறை அருகே 6, 7 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லையளித்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்தனா். பவானி, அம்மாபேட்டை, பழைய மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (3... மேலும் பார்க்க