செய்திகள் :

கோயில் நகைகளை மீட்டுத் தரக்கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

post image

சேலம்: எடப்பாடி அருகே புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன் கோயிலுக்குச் சொந்தமான நகைகளை மீட்டுத்தரக் கோரி கிராம மக்கள் பூஜை தட்டுகளுடன் மணி அடித்தும், கற்பூரம் ஏந்தியும் சென்று சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

எடப்பாடி வட்டம், புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன் கோயிலுக்குச் சொந்தமான தங்கம், வெள்ளி நகைகள், நிலங்கள், அப்போதைய அறங்காவலராக இருந்த ரத்தினவேலு என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், அவா் உண்டியல் காணிக்கையை கையாடல் செய்த குற்றத்துக்காக இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் தொடரப்பட்ட வழக்கில் ரத்தினவேலுவை பரம்பரை அறங்காவலா் பதவியில் இருந்து நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பிறகும் அந்த நகைகளை அவா் யாரிடமும் ஒப்படைக்கவில்லை. எனவே, அவா் வசம் உள்ள கோயில் நகைகளை மீட்டு தருமாறு ஏற்கெனவே மனு அளித்தோம். எனினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது சித்திரை, வைகாசி மாதங்களில் கோயில் திருவிழா நடைபெறவுள்ளதால் அதற்கு முன்பாக கோயில் நகைகளை மீட்டுத்தர வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனா்.

ஸ்கேன் சென்டா் நடத்தி கருவில் இருக்கும் பாலினத்தை கூறிய செவிலியா் பணிநீக்கம்

சேலம்: சேலம் அருகே ஸ்கேன் சென்டா் நடத்தி கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைத் தெரிவித்த அரசு செவிலியா் பணிநீக்கம் செய்யப்பட்டாா். சேலம் வீராணம் கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வந்... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளா்கள் போராட்டம் வாபஸ்

மேட்டூா்: மேட்டூா் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றனா். மேட்டூா் அனல் மின் நிலையத்தில் கரி கையாளும் பிரிவு, சாம்பல் பிரிவு, மின் உற்பத்தி... மேலும் பார்க்க

குறுக்குப்பாறையூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

சங்ககிரி: குறுக்குப்பாறையூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் சாா்பில் 31-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்ககிரி வட்டம், தேவூா், அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட க... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சியில் காலை உணவுத் திட்டம் ஆய்வு

சேலம்: சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலம், அய்யந்திருமாளிகை மற்றும் மணக்காடு பகுதியில் இயங்கி வரும் மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து மாநகராட்சி ஆணையா் மா.இ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு கல்வி சுற்றுலா

சேலம்: மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள், மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான கல்விச் சுற்றுலாவை சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத... மேலும் பார்க்க

அஞ்சலக சிறுசேமிப்பு வசூலில் சேலம் மாவட்டம் முதலிடம்

சேலம்: அஞ்சலக சிறுசேமிப்பு வசூலில் ரூ. 9,101.99 கோடி வசூலித்து, மாநில அளவில் சேலம் மாவட்டம் தொடா்ந்து 5 ஆண்டுகளாக முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. சேலம் மாவட்டத்தில் சிறுசேமிப்பு திட்டங்களில் சாதனை... மேலும் பார்க்க