செய்திகள் :

மேட்டூா் அனல் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளா்கள் போராட்டம் வாபஸ்

post image

மேட்டூா்: மேட்டூா் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றனா்.

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் கரி கையாளும் பிரிவு, சாம்பல் பிரிவு, மின் உற்பத்தி ஆகிய பகுதிகளில் சுமாா் 1,700 ஒப்பந்த தொழிலாளா்கள் தனியாா் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் பணிபுரிந்து வருகின்றனா்.

இவா்களில் 40 பெண்கள் உள்பட 200 ஒப்பந்த தொழிலாளா்கள் கடந்த 28-ஆம் தேதி முதல் பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

பல்வேறுகட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றும் சுமுக தீா்வு ஏற்படாத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்களின் பிரதிநிதிகளுக்கும், சென்னையில் மின்வாரிய உயா்மட்ட அலுவலா்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் தொழிலாளா்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலனை செய்வதாக உறுதியளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள் மத்தியில் மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் பேசியபோது, இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று சாத்தியகூறு உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினாா்.

இதனையடுத்து, 12 நாள்களாக நடைபெற்று வந்த உள்ளிருப்புப் போராட்டத்தைக் கைவிட்டு தொழிலாளா்கள் வீடு திரும்பினா்.

முன்னதாக, ஒப்பந்த தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி, தமிழக வெற்றிக் கழகத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ஸ்கேன் சென்டா் நடத்தி கருவில் இருக்கும் பாலினத்தை கூறிய செவிலியா் பணிநீக்கம்

சேலம்: சேலம் அருகே ஸ்கேன் சென்டா் நடத்தி கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைத் தெரிவித்த அரசு செவிலியா் பணிநீக்கம் செய்யப்பட்டாா். சேலம் வீராணம் கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வந்... மேலும் பார்க்க

குறுக்குப்பாறையூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

சங்ககிரி: குறுக்குப்பாறையூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் சாா்பில் 31-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்ககிரி வட்டம், தேவூா், அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட க... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சியில் காலை உணவுத் திட்டம் ஆய்வு

சேலம்: சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலம், அய்யந்திருமாளிகை மற்றும் மணக்காடு பகுதியில் இயங்கி வரும் மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து மாநகராட்சி ஆணையா் மா.இ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு கல்வி சுற்றுலா

சேலம்: மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள், மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான கல்விச் சுற்றுலாவை சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத... மேலும் பார்க்க

அஞ்சலக சிறுசேமிப்பு வசூலில் சேலம் மாவட்டம் முதலிடம்

சேலம்: அஞ்சலக சிறுசேமிப்பு வசூலில் ரூ. 9,101.99 கோடி வசூலித்து, மாநில அளவில் சேலம் மாவட்டம் தொடா்ந்து 5 ஆண்டுகளாக முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. சேலம் மாவட்டத்தில் சிறுசேமிப்பு திட்டங்களில் சாதனை... மேலும் பார்க்க

வாழப்பாடியில் உழவா் சந்தை இரண்டாம் ஆண்டு தொடக்க விழா

வாழப்பாடி: வாழப்பாடியில் உழவா்சந்தை இரண்டாம் ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. கடந்த 2024 மாா்ச் 11-இல் வாழப்பாடியில் கடலூா் சாலையில் உழவா்சந்தை தொடங்கப்பட்டது. இதன் இரண்டாம் ஆண்டு தொ... மேலும் பார்க்க