செய்திகள் :

கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

post image

வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டு இருந்த கோவை குற்றாலம் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மே 23 ஆம் தேதி வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டு இருந்த கோவை குற்றாலம், இன்று முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்பட்டு உள்ளது.கடந்த மே மாதம் பெய்த பருவமழை, மற்றும் கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழையாக பெய்து வந்தது.

இதன் காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவை குற்றாலம் சூழல் சுற்றுலாவிற்கு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காகத் தற்காலிகமாக வனத்துறையினர் மூடுவதாக அறிவித்து மூடப்பட்டு இருந்தது. மழைப்பொழிவு குறைந்ததாலும், அருவியில் நீர்வரத்து குறைந்ததாலும், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாகக் குளிக்க அனுமதி வழங்கப்படுவதாகவும் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்நிலையில் இன்று முதல் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலாவிற்குச் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். வனத்துறையின் தனி வாகனங்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர். இதற்கான கட்டணம் வசூலிக்கப்படும். கோவை குற்றாலம், மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளதால் வெளியூர் மற்றும் வெளி மாவட்டம், மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டுப் பயணிகளும் வந்து கோவை குற்றாலம் சூழல் சுற்றுலாவை மகிழ்ச்சியுடன் அனுபவித்துச் செல்கின்றனர்.

Coimbatore Courtallam, which was closed due to flooding, has reopened and tourists are allowed to visit from today.

கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 14-ல் வெளியீடு!

கால்நடை மருத்துவப் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் ஜூலை 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப்பட்டியலை பல்கலைக்கழக இணையதளத்தில் https:\\adm.tanuvas.ac.in மற்றும் https:\\tan... மேலும் பார்க்க

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுகவின் திட்டம் மாற்றம்! திமுக மீது இபிஎஸ் குற்றச்சாட்டு!

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுகவின் திட்டத்தை திமுக அரசு மாற்றுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.கடலூர் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரு... மேலும் பார்க்க

தவெக ஆர்ப்பாட்டத்துக்கு 16 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி

சென்னையில் தவெக ஆர்ப்பாட்டம் நடத்த 16 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி அளித்துள்ளது. மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறையினரின் அராஜகத்துக்கு எதிராக பல்வேறு கட்சியினர் கண்டனம்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புகார்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலையை, மெழுகு அச்சு எடுத்ததாக எழுந்த புகார் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் ஏகாம்பரநாதர் கோயிலில் விசாரணை நடத்தினர்.மெழுது அச்சு எட... மேலும் பார்க்க

உலக பாரம்பரிய சின்னமாக செஞ்சி கோட்டை! முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

செஞ்சி கோட்டையை பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரித்தது மகிழ்ச்சியளித்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "கிழக்கின் ட்ராய்" என்றழைக்கப்படும் செஞ்சி ... மேலும் பார்க்க

செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ சின்னம் என்ற அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கிழக்கின் ட்ராய் என அறியப... மேலும் பார்க்க