செய்திகள் :

கோவை சிட்டி டு விமான நிலையம் இனி 10 நிமிடங்கள் தான்! - திறக்கப்பட்டது அவிநாசி சாலை மேம்பாலம்

post image

கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடங்கியது. பணிகள் முடிந்த நிலையில் அந்த பாலத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொது மக்களின் பயன்பாட்டுக்காக இன்று திறந்து வைத்தார்.

அவிநாசி சாலை மேம்பாலம்

மேம்பாலத்துக்கு ஜிடி நாயுடு பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. பாலம் திறக்கப்பட்டிருப்பதால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் இதுதான் தமிழ்நாட்டின் நீளமான மேம்பாலம். கோவை விமான நிலையம், ஹோப்ஸ், நவ இந்தியா, அண்ணா சிலை ஆகிய நான்கு பகுதிகளில் இறங்குதளமும், கோவை விமான நிலையம், ஹோப்ஸ், நவ இந்தியா பகுதிகளில் ஏறுதளமும் அமைக்கப்பட்டுள்ளது.

திறப்பு

1.50 மீ அகலத்தில் நடைபாதையுடன் கூடிய வடிகால், சைனஸ் பிளேட் விரிவு இணைப்புகள், ஒலி குறைப்பு, மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

4 வழித்தடத்தில் மேம்பாலம், 6 வழித்தடத்துடன் விரிவுபடுத்தப்பட்ட தரைத்தள சாலை அமைக்கப்பட்டுள்ளது. சோலார் மின் விளக்குகள், பாதுகாப்பான தடுப்பு சுவர், விபத்தைத் தடுப்பதற்காக ரோலர் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

அவிநாசி சாலை மேம்பாலம்

கோவை நகர் பகுதியில் இருந்து விமான நிலையம் செல்வதற்கு சுமார் 45 நிமிடம் ஆகும் நிலையில், மேம்பாலம் மூலம் பயணித்தால் சுமார் 10 நிமிடங்களிலேயே விமான நிலையத்தை அடைந்துவிடலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Modi: "நண்பர் ட்ரம்ப்பிடம் பேசினேன்" - மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தையா?

பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் பேசியதாகவும், 2 ஆண்டுகளுக்கு மேல் நடக்கும் இஸ்ரேல் - காசா போரை நிறுத்தும் வரலாற்று அமைதித்திட்டத்தின் வெற்றிக்காக அவரை வாழ்த்தியதாகவும் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

பி.ஆர் கவாய்: "அதிர்ச்சிக்கு உள்ளானோம்" - காலணி வீசிய சம்பவம் குறித்து நீதிபதி சொல்வதென்ன?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது கடந்த அக்டோபர் 6 (திங்கட்கிழமை) வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசி தாக்க முயன்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை எழுப்பியது. அது தனக்கு மிகவும் அதிர்ச்ச... மேலும் பார்க்க

பீகார் தேர்தல்: வழக்கறிஞர்கள், டாக்டர்கள், அரசு அதிகாரிகள்; வேட்பாளர்களை அறிவித்த பிரசாந்த் கிஷோர்

பீகார் சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் முதல் முறையாக போட்டியிட இருக்கிறார். இதற்காக அவர் ஜன் சூரஜ் என்ற கட்சியை தொடங்கி தேர்தல... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நகரங்களின் பெயர்களை உணவுகளுக்கு வைத்து சாப்பிட்ட இந்திய விமானப்படை - மெனு வைரல்!

இந்திய விமானப்படையின் 93வது ஆண்டு விழாவில் வழங்கப்பட்ட இரவு விருந்தின் மெனு வைரலாகி வருகிறது. வழக்கமான விருந்து உணவுகள் என்றால் அதற்கு வித்தியாசமாக பெயரிட்டு கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்த விருந்து எந்த ... மேலும் பார்க்க

தாலிபன்: இந்தியாவில் ஆப்கன் அமைச்சர்; கொடியில் குழப்பம் - வருகையின் பின்னணி என்ன?

ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டின் தாலிபன் அமைச்சர் அமிர் கான் முத்தாகி டெல்லி வந்தடைந்துள்ளது பிராந்திய அரசியலில் முக்கியமான தருணமாக பார்ப்படுகிறது. ஐநாவின் பாதுகாப்பு கவ... மேலும் பார்க்க

`ஸ்டார்ட்அப் வளர்ச்சிக்காக ரூ.100 கோடியில் திட்டம்’ - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட் அப் நிறுவனம் சார்பில் சர்வதேச மாநாடு கோவை கொடிசியா வர்த்தக வளாத்தில் நடைபெற்றது. இன்றும், நாளையும் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில... மேலும் பார்க்க