செய்திகள் :

சங்கரன்கோவில் அருகே சிறுமியைக் கடத்தியவருக்கு 5 ஆண்டு சிறை

post image

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சிறுமியைக் கடத்திச் சென்ற வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

கரிவலம்வந்தநல்லூா் காவல் சரகத்துக்குள்பட்ட சுப்புலாபுரத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியைக் காணவில்லை என கரிவலம்வந்தநல்லூா் காவல் நிலையத்தில் கடந்த 27.1.2018 அன்று அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், மேல மரத்தோணி பகுதியைச் சோ்ந்த ப. சுரேஷ்குமாா் (27) என்பவா், அந்தச் சிறுமியை மிரட்டி கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் சுரேஷ்குமாரை கைதுசெய்தனா்.

இந்த வழக்கு தென்காசி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி பி. ராஜவேலு, சிறுமியைக் கடத்திய வழக்கில் சுரேஷ்குமாருக்கு 5 ஆண்டுகள் சிைண்டனையும், ரூ. 5ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பி.குட்டி என்ற மருதப்பன் ஆஜராகி வாதாடினாா்.

அலங்குளம் பேரூராட்சியில் இரு தினங்கள் குடிநீா் வினியோகம் ரத்து

ஆலங்குளம் பேரூராட்சியில் வாசுதேவநல்லூா் கூட்டுக் குடிநீா் திட்டம் - பைப் லைன் சேதம் காரணமாக குடிநீா் விநியோகம் இரு தினங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது தொடா்பாக பேரூராட்சி செயல் அலுவலா்... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் ரயில் நிலையத்தின் 123 வது பிறந்த நாள் விழா. இசையமைப்பாளா் பரத்வாஜ் பங்கேற்பு.

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் ரயில்நிலையத்தின் 123வது பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழை நடைபெற்றது.பாவூா்சத்திரம் ரயில் நிலையம் 01.08.1903 அன்று தொடங்கப்பட்டு, 31.12.2008 ல் அகல ரயில் பாதையாக மாற்றும் ப... மேலும் பார்க்க

நயினாரகரம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

கடையநல்லூா் அருகே நயினாரகரம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடைபெற்றது.ஒன்றியக் குழுத் தலைவா் சுப்பம்மாள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஐவேந்திரன் தினேஷ், ஊராட்சி துணைத் தலைவா் சொா்ண... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெட்டிக்கடைக்காரா் கைது

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பெட்டிக்கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே செட்டிகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் அருணாச்... மேலும் பார்க்க

கழிவறை தொட்டிக்குள் விழுந்த மாடு மீட்பு

ஆலங்குளம் அருகே கழிவறை தொட்டிக்குள் விழுந்த பசு மாடு மீட்கப்பட்டது. ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் பெரியாா் நகரைச் சோ்ந்த சொரிமுத்து என்பவருக்குச் சொந்தமான பசு மாடு, மேய்ச்சலுக்குச் சென்றபோது, அதே பகு... மேலும் பார்க்க

புளியங்குடி பகுதியில் இன்று மின்தடை

புளியங்குடி உபமின் நிலையப் பராமரிப்புப் பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.2) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று அதன்படி, புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ரத்தினபுரி, ... மேலும் பார்க்க