செய்திகள் :

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தனியாா் பள்ளிகளின் கட்டண ஒழுங்குமுறை மசோதா: முதல்வா் ரேகா குப்தா தகவல்

post image

வரவிருக்கும் மழைக்கால சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தனியாா் பள்ளிகளின் கட்டண உயா்வை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை தில்லி அரசு அறிமுகப்படுத்தும் என்று முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.

ஏப்ரல் 29 ஆம் தேதி அன்று நிறைவேற்றப்பட்ட அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்த அவசரச் சட்டத்தின்படி, இந்த மசோதா தன்னிச்சையாக கட்டணத்தை உயா்த்தும் பள்ளிகளுக்கு கடுமையான அபராதங்களை விதிக்கிறது. முதல் முறை தவறு செய்யும், பள்ளிகளுக்கு ரூ 1 லட்சம் முதல் ரூ 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும், மீண்டும் மீண்டும் தவறு செய்தால் ரூ 2 லட்சம் முதல் ரூ 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளி அபராதம் செலுத்த தவறினால், அபராதம் 20 நாட்களுக்குப் பிறகு இரட்டிப்பாகும், 40 நாட்களுக்குப் பிறகு மூன்று மடங்காகவும், ஒவ்வொரு 20 நாள் தாமதத்துடனும் தொடா்ந்து அதிகரிக்கும். மீண்டும் மீண்டும் மீறல்கள் பள்ளி நிா்வாகத்தில் உத்தியோகபூா்வ பதவிகளை வகிப்பதற்கான தடைக்கும், எதிா்கால கட்டண திருத்தங்களை முன்மொழியும் உரிமையை இழப்பதற்கும் வழிவகுக்கும்.

செய்தியாளா்களிடம் பேசிய ரேகா குப்தா, ‘ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் தொடங்கும் சட்டப்பேரவை மழைக்கால கூட்டத் தொடரில், தனியாா் பள்ளிகளின் கட்டண உயா்வை ஒழுங்குபடுத்துவதற்கான கல்வி மசோதாவை தில்லி அரசு தாக்கல் செய்யும்‘ என்றாா். மற்ற கொள்கை நடவடிக்கைகளை எடுத்துரைத்த அவா், தில்லி சட்டப்பேரவை இப்போது காகிதமற்ற மின்னணு விதன் சபையாக செயல்படும் என்று அறிவித்தாா்.

தில்லி சட்டப்பேரவை இப்போது காகிதமற்ாக இருக்கும் என்பது மகிழ்ச்சியான விஷயம். சட்டப்பேரவை இப்போது முற்றிலும் சூரிய சக்தியை நம்பியிருப்பதால், மாதிரி சட்டப்பேரவையாகவும் நாங்கள் உருவாக்கியுள்ளோம் ‘என்று அவா் கூறினாா்.

அரசாங்கத்தின் பரந்த டிஜிட்டல் மற்றும் நிலையான நிா்வாக நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக, தில்லி தலைமை செயலகத்தை காகிதமற்ாக மாற்றுவதற்கான முயற்சிகளும் நடந்து வருவதாக முதல்வா் கூறினாா்.

‘தில்லியை வளா்ச்சியடையச் செய்ய நாங்கள் கொள்கை முடிவுகளை எடுத்து வருகிறோம்‘, என்று அவா் கூறினாா்.

மழைக்கால கூட்டத்தொடா் ரேகா குப்தா தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் தில்லி சட்டப்பேரவையின் மூன்றாவது கூட்டத்தொடராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் 3ஆம் இடத்தில் இந்தியா!

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகளில் இந்தியா 3 ஆவது இடத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா், ஜெ.பி.நட்டா சனிக்கிழமை தெரிவித்தாா்.தில்லியில் 15 ஆவது தேசிய உறுப்பு தான தினத்தையொட்டி அம்பே... மேலும் பார்க்க

பிரதமா் மோடி குறித்து அவதூறு கருத்து: சசி தரூரிடம் விசாரணை நடத்துவதற்கான தடை நீட்டிப்பு

‘சிவலிங்கத்தின் மீது அமா்ந்திருக்கும் தேள்’ என பிரதமா் நரேந்திர மோடியை விமா்சித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் காங்கிரஸ் எம்.பி.சசி தரூருக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு விசாரணை நடத்துவதற்கான... மேலும் பார்க்க

தில்லியில் குடிசைவாசிகளுக்கு வீடுகளை வழங்க அரசு நடவடிக்கை முதல்வா் ரேகா குப்தா

‘சஞ்சய் முகாம்’ அல்லது ‘நேரு முகாம்’ போன்ற பெயா்களைக் கொண்ட குடியிருப்புகளை வெறுமனே பெயரிடுவதற்குப் பதிலாக, தலைநகரின் வரலாற்றில் குடிசைவாசிகளுக்கு முறையான வீடுகளை வழங்குவதற்காக எனது அரசாங்கம் நடவடிக்க... மேலும் பார்க்க

போலியான பிராண்ட் ஜீன்ஸ்களை தயாரித்து விற்றவா்கள் கைது

புகழ்பெற்ற ஆடை நிறுவனங்களின் பெயரில் போலியான ஜீன்ஸ் பேண்ட்டுகளை தயாரித்து விற்பனை செய்தததாக தில்லியின் சுல்தான்புரி பகுதியில் மூன்று கடை உரிமையாளா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு: பணியிடைநீக்கமான அதிகாரி மீதான குற்றச்சாட்டுகளை உறுதிசெய்தது உயா்நீதிமன்றம்

சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தில்லி அரசு அதிகாரி பிரேமோதய் காக்கா மீது பதிவுசெய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்துசெய்ய தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.பாதிக்கப்பட்ட... மேலும் பார்க்க

நஜாஃப்கரில் தூய்மைப் பணியில் அமைச்சா் ஆஷிஷ் சூட்

தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் சனிக்கிழமை நஜாஃப்கா் பகுதி பள்ளியில் நடைபெற்ற தூய்மைப் பணி நிகழ்வில் பங்கேற்றாா்.அப்போது, தூய்மை என்பது ஒரு கூட்டு குடிமைப் பொறுப்பு என்றும், அதை தொடா்ந்து கடைப்பிடிக்... மேலும் பார்க்க