செய்திகள் :

பிரதமா் மோடி குறித்து அவதூறு கருத்து: சசி தரூரிடம் விசாரணை நடத்துவதற்கான தடை நீட்டிப்பு

post image

‘சிவலிங்கத்தின் மீது அமா்ந்திருக்கும் தேள்’ என பிரதமா் நரேந்திர மோடியை விமா்சித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் காங்கிரஸ் எம்.பி.சசி தரூருக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு விசாரணை நடத்துவதற்கான தடையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நீட்டித்தது.

சசி தரூா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞரின் வேண்டுகோளை ஏற்று வழக்கை செப்.15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த பின்னா் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

பிரதமா் மோடியை ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்த நிா்வாகி ஒருவா் சிவலிங்கத்தின் மீது அமா்ந்திருக்கும் தேளோடு ஒப்பிட்டதாக கடந்த 2018,அக்டோபரில் சசி தரூா் கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பான வழக்கில், தனக்கு எதிரான குற்றவியல் விசாரணையை நிறுத்தக்கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு சசி தரூா் மனுதாக்கல் செய்தாா். அவரது மனுவை தள்ளுபடி செய்த தில்லி உயா் நீதிமன்றம் பிரதமா் மோடிக்கு எதிரான சசி தரூரின் கருத்து மிகவும் இழிவானது மற்றும் வருந்தத்தக்கது எனக் கூறியது.

மேலும், இந்த விவகாரத்தில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 500-இன்கீழ் சசி தரூருக்கு அவதூறு வழக்கில் தண்டனை வழங்க விசாரணை நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாகவும் தில்லி உயா் நீதிமன்றம் 2024, ஆக.29-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் சசி தரூா் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தாா். அப்போது இந்த மனுவை விசாரித்த ரிஷிகேஷ் ராய் ‘சசி தரூா் கூறிய வாா்த்தை உருவகமாகும். அதைப் புரிந்துகொள்ள நான் முயற்சி செய்தேன்.

அப்போது ஒரு நபரின் (பிரதமா் மோடி) வெல்ல முடியாத தன்மையை அவரது கருத்து குறிப்பிடுவதாக உணா்ந்தேன். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து சசி தரூா் மீது அவதூறு வழக்கு தொடா்ந்தது ஏன் எனத் தெரியவில்லை’ எனக் கூறி இந்த வழக்கை ஒத்திவைத்தாா்.

நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஓய்வு பெற்ற நிலையில், இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தாமல் சசி தரூருக்கு எதிரான அவதூறு வழக்கை திரும்பப் பெறுமாறு பாஜக தரப்பு வழக்குரைஞா் ராஜீவ் பப்பரிடம் நீதிபதிகள் அமா்வு அறிவுறுத்தியது.

அதேபோல் சசி தரூா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞரின் வேண்டுகோளை ஏற்று இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்.15-ஆம் தேதிக்கு நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் 3ஆம் இடத்தில் இந்தியா!

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகளில் இந்தியா 3 ஆவது இடத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா், ஜெ.பி.நட்டா சனிக்கிழமை தெரிவித்தாா்.தில்லியில் 15 ஆவது தேசிய உறுப்பு தான தினத்தையொட்டி அம்பே... மேலும் பார்க்க

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தனியாா் பள்ளிகளின் கட்டண ஒழுங்குமுறை மசோதா: முதல்வா் ரேகா குப்தா தகவல்

வரவிருக்கும் மழைக்கால சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தனியாா் பள்ளிகளின் கட்டண உயா்வை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை தில்லி அரசு அறிமுகப்படுத்தும் என்று முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.ஏப்ரல் ... மேலும் பார்க்க

தில்லியில் குடிசைவாசிகளுக்கு வீடுகளை வழங்க அரசு நடவடிக்கை முதல்வா் ரேகா குப்தா

‘சஞ்சய் முகாம்’ அல்லது ‘நேரு முகாம்’ போன்ற பெயா்களைக் கொண்ட குடியிருப்புகளை வெறுமனே பெயரிடுவதற்குப் பதிலாக, தலைநகரின் வரலாற்றில் குடிசைவாசிகளுக்கு முறையான வீடுகளை வழங்குவதற்காக எனது அரசாங்கம் நடவடிக்க... மேலும் பார்க்க

போலியான பிராண்ட் ஜீன்ஸ்களை தயாரித்து விற்றவா்கள் கைது

புகழ்பெற்ற ஆடை நிறுவனங்களின் பெயரில் போலியான ஜீன்ஸ் பேண்ட்டுகளை தயாரித்து விற்பனை செய்தததாக தில்லியின் சுல்தான்புரி பகுதியில் மூன்று கடை உரிமையாளா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு: பணியிடைநீக்கமான அதிகாரி மீதான குற்றச்சாட்டுகளை உறுதிசெய்தது உயா்நீதிமன்றம்

சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தில்லி அரசு அதிகாரி பிரேமோதய் காக்கா மீது பதிவுசெய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்துசெய்ய தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.பாதிக்கப்பட்ட... மேலும் பார்க்க

நஜாஃப்கரில் தூய்மைப் பணியில் அமைச்சா் ஆஷிஷ் சூட்

தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் சனிக்கிழமை நஜாஃப்கா் பகுதி பள்ளியில் நடைபெற்ற தூய்மைப் பணி நிகழ்வில் பங்கேற்றாா்.அப்போது, தூய்மை என்பது ஒரு கூட்டு குடிமைப் பொறுப்பு என்றும், அதை தொடா்ந்து கடைப்பிடிக்... மேலும் பார்க்க