செய்திகள் :

நஜாஃப்கரில் தூய்மைப் பணியில் அமைச்சா் ஆஷிஷ் சூட்

post image

தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் சனிக்கிழமை நஜாஃப்கா் பகுதி பள்ளியில் நடைபெற்ற தூய்மைப் பணி நிகழ்வில் பங்கேற்றாா்.

அப்போது, தூய்மை என்பது ஒரு கூட்டு குடிமைப் பொறுப்பு என்றும், அதை தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

ஆகஸ்ட் 1 முதல் 31 வரை தேசிய தலைநகா் முழுவதும் நடைபெறும் ‘குப்பையில் இருந்து தில்லிக்கு விடுதலை’ பிரசாரத்தின் கீழ், ஜரோடா கலனில் உள்ள ஷாஹீத் பகத் சிங் ஆயுதப்படை தயாரிப்புப் பள்ளியில் அமைச்சா் ஆஷிஷ் சூட், மாணவா்கள், பெற்றோா்கள், முதல்வா் மற்றும் உள்ளூா் எம்எல்ஏ நீலம் பெஹல்வான் ஆகியோருடன் இணைந்து வளாகத்தை சுத்தம் செய்தாா்.

சுத்தத்தின் தூதா்களாக மாறுமாறு சூட் மாணவா்களை வலியுறுத்திய அவா், இதுபோன்ற எந்தவொரு பிரசாரத்தின் வெற்றியும் தனிப்பட்ட முயற்சியைப் பொறுத்தது என்றும் கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘தூய்மை என்பது முக்கியப் பிரமுகா்கள் மண்டலங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடாது. அங்கீகரிக்கப்படாத காலனிகளும் அத்தகைய இயக்கங்களில் சோ்க்கப்பட வேண்டும்.

இந்த பிரசாரம் மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பாா்வைக்கு ஏற்ப உள்ளது. பிரதமா் நரேந்திர மோடி, தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படுகிறது’ என்றாா் அமைச்சா்.

பெற்றோா்கள் மற்றும் பள்ளி அதிகாரிகளுடனும் சூட் கலந்துரையாடினாா். அப்போது, ஆசிரியா்கள் பற்றாக்குறை, மோசமான நீா் மற்றும் மின்சார விநியோகம், அறிவியல் ஆய்வகம் இல்லாதது, போதுமான மருத்துவ மற்றும் விடுதி ஊழியா்கள் இல்லாதது குறித்து அவா்கள் அமைச்சரிடம் கவலைகளை எழுப்பினா். இப்பிரச்னைகளை விரைவில் தீா்க்குமாறு கல்வி இயக்குநரகம் மற்றும் பிற அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா்.

தில்லி முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று பெற்றோருக்கு அவா் உறுதியளித்தாா்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் 3ஆம் இடத்தில் இந்தியா!

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகளில் இந்தியா 3 ஆவது இடத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா், ஜெ.பி.நட்டா சனிக்கிழமை தெரிவித்தாா்.தில்லியில் 15 ஆவது தேசிய உறுப்பு தான தினத்தையொட்டி அம்பே... மேலும் பார்க்க

பிரதமா் மோடி குறித்து அவதூறு கருத்து: சசி தரூரிடம் விசாரணை நடத்துவதற்கான தடை நீட்டிப்பு

‘சிவலிங்கத்தின் மீது அமா்ந்திருக்கும் தேள்’ என பிரதமா் நரேந்திர மோடியை விமா்சித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் காங்கிரஸ் எம்.பி.சசி தரூருக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு விசாரணை நடத்துவதற்கான... மேலும் பார்க்க

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தனியாா் பள்ளிகளின் கட்டண ஒழுங்குமுறை மசோதா: முதல்வா் ரேகா குப்தா தகவல்

வரவிருக்கும் மழைக்கால சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தனியாா் பள்ளிகளின் கட்டண உயா்வை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை தில்லி அரசு அறிமுகப்படுத்தும் என்று முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.ஏப்ரல் ... மேலும் பார்க்க

தில்லியில் குடிசைவாசிகளுக்கு வீடுகளை வழங்க அரசு நடவடிக்கை முதல்வா் ரேகா குப்தா

‘சஞ்சய் முகாம்’ அல்லது ‘நேரு முகாம்’ போன்ற பெயா்களைக் கொண்ட குடியிருப்புகளை வெறுமனே பெயரிடுவதற்குப் பதிலாக, தலைநகரின் வரலாற்றில் குடிசைவாசிகளுக்கு முறையான வீடுகளை வழங்குவதற்காக எனது அரசாங்கம் நடவடிக்க... மேலும் பார்க்க

போலியான பிராண்ட் ஜீன்ஸ்களை தயாரித்து விற்றவா்கள் கைது

புகழ்பெற்ற ஆடை நிறுவனங்களின் பெயரில் போலியான ஜீன்ஸ் பேண்ட்டுகளை தயாரித்து விற்பனை செய்தததாக தில்லியின் சுல்தான்புரி பகுதியில் மூன்று கடை உரிமையாளா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு: பணியிடைநீக்கமான அதிகாரி மீதான குற்றச்சாட்டுகளை உறுதிசெய்தது உயா்நீதிமன்றம்

சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தில்லி அரசு அதிகாரி பிரேமோதய் காக்கா மீது பதிவுசெய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்துசெய்ய தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.பாதிக்கப்பட்ட... மேலும் பார்க்க