செய்திகள் :

சிர்கா பெயிண்ட்ஸ் லாபம் 39 சதவிகிதம் உயர்வு!

post image

புதுதில்லி: மர பூச்சு பொருட்கள் உற்பத்தியாளரான சிர்கா பெயிண்ட்ஸ் இந்தியா, முதல் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 39.2 சதவிகிதம் அதிகரித்து ரூ.14.20 கோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கு லாப வரம்பு மற்றும் விற்பனையில் ஏற்பட்ட வளர்ச்சியே காரணம் என்றது.

சிர்கா பெயிண்ட்ஸ் கடந்த வருடம் ரூ.10.21 கோடி நிகர லாபம் ஈட்டியதாக தெரிவித்துள்ளது. அதே வேளையில் அதன் செயல்பாடுகளிலிருந்து வந்த வருவாய் 45.26 சதவிகிதம் அதிகரித்து ரூ.114.24 ஆக உள்ளது என்றது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் அதன் வருவாய் ரூ.78.64 கோடியாக இருந்தது.

ஜூன் முடிய உள்ள காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செலவுகள் 44 சதவிகிதம் அதிகரித்து ரூ.95.26 கோடியாக உள்ளது.

வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடன்தொகை நீக்கத்திற்கு முந்தைய வருவாய் கடந்த ஆண்டு இதே காலத்தில் 17.89 சதவிகிதத்திலிருந்து 19.74 சதவிகிதமாக மேம்பட்ட நிலையில் நிறுவனத்தின் மொத்த வருமானம், இதர வருமானத்தையும் சேர்த்து, 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் 43 சதவிகிதம் அதிகரித்து ரூ.114.44 கோடியாக உயர்ந்துள்ளது.

2021 நிதியாண்டின் முதல் காலாண்டில், நிறுவனம் அதன் சுவர் பெயிண்ட் உற்பத்தி அலகை, முதலில் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக தேவைக்கு ஏற்ப பெரிய வளாகத்திற்கு மாற்றியுள்ளது.

வெம்ப்லி பெயிண்ட்களை கையகப்படுத்திய பிறகு, தற்போதுள்ள வசதிகளைத் தவிர, மேலும் மூன்று உற்பத்தி அலகுகள் சேர்க்கப்பட்டுள்ளன என்றது நிறுவனம்.

இதையும் படிக்க: தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

Sirca Paints India has reported a 39.2 per cent increase in its consolidated net profit to Rs 14.20 crore for the first quarter.

ரூ.335 கோடி கடனை குறைத்து கொண்ட பிசி ஜுவல்லர்ஸ்!

புதுதில்லி: பிசி ஜூவல்லர்ஸ் கடந்த நான்கு மாதங்களில் அதன் நிகர கடனை 19 சதவிகிதம் குறைத்து ரூ.1,445 கோடியாகக் உள்ளதாக தெரிவித்தது. மேலும் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் கடன் இல்லாத நிறுவனமாக மாறும் என்று... மேலும் பார்க்க

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் 2025-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஜனவரி-ஜூன்) வீடுகள் விற்பனை அளவு 5 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் மதிப்பு அடிப்படையில் அது 9 சதவீதம் உயா்ந்துள்ளது.இது குறித்து ம... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

தமிழ்நாட்டில் நகரங்களுக்கு இடையே இயக்குவதற்கான 100 மின்-பேருந்துகளை வழங்குவதற்கான பூா்வாங்க ஒப்பந்தத்தை யுனிவா்சல் பஸ் சா்வீசஸ் (யுபிஎஸ்) நிறுவனத்தின் பிரிவான கிரீன் எனா்ஜி மொபிலிட்டியுடன் முன்னணி வா்... மேலும் பார்க்க

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்துள்ளது.கடந்த வாரம் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ. 75,040-க்கு விற்பனையானது. அதன்பிறகு விலை படிப்படிய... மேலும் பார்க்க

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

இந்திய உற்பத்தித் துறை கடந்த ஜூலை மாதத்தில் 16 மாதங்களில் இல்லாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இதுகுறித்து ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:... மேலும் பார்க்க

ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!

புதுதில்லி: உள்நாட்டு வருவாய் அதிகரித்ததன் காரணமாக ஜூலை மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 7.5 சதவிகிதம் அதிகரித்து சுமார் ரூ.1.96 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.2024 ஜூலையில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வ... மேலும் பார்க்க