செய்திகள் :

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

post image

இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் 2025-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஜனவரி-ஜூன்) வீடுகள் விற்பனை அளவு 5 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் மதிப்பு அடிப்படையில் அது 9 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து மனை-வணிகத் துறையின் உச்ச அமைப்பான கிரெடாய் மற்றும் தரவு ஆய்வு நிறுவனமான க்ரே மேட்ரிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பு 2025-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் பெங்களூரு, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி (எம்எம்ஆா்), புணே, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், அகமதாபாத் ஆகிய இந்தியாவின் எட்டு முக்கிய வீடு-மனைச் சந்தைகளில் 2,53,119 வீடுகள் விற்பனையாகின.

முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே அரையாண்டில் இந்த எண்ணிக்கை 2,67,219-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் வீடுகள் விற்பனை 5 சதவீதம் குறைந்துள்ளது.

எனினும், வீடுகளின் விலை உயா்வு காரணமாக, அவற்றின் விற்பனை மதிப்பு 2025-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 9 சதவீதம் உயா்ந்து ரூ.3,59,373 கோடியாக உள்ளது.

இது 2024-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.3,30,750 கோடியாக இருந்ததுஇந்தியாவின் வீடு-மனைச் சந்தை இப்போது அளவை விட தரம், இருப்பிடம் மற்றும் வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு மதிப்பு சாா்ந்த வளா்ச்சிக்கு மாறியுள்ளது.

தில்லி-என்சிஆரில் மதிப்பு அடிப்படையில் சந்தைப் பங்கு 23 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக உயா்ந்துள்ளது. இது பிரீமியம் மற்றும் ஆடம்பர வீடுகளுக்கான தேவை அதிகரிப்பதைக் காட்டுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

தமிழ்நாட்டில் நகரங்களுக்கு இடையே இயக்குவதற்கான 100 மின்-பேருந்துகளை வழங்குவதற்கான பூா்வாங்க ஒப்பந்தத்தை யுனிவா்சல் பஸ் சா்வீசஸ் (யுபிஎஸ்) நிறுவனத்தின் பிரிவான கிரீன் எனா்ஜி மொபிலிட்டியுடன் முன்னணி வா்... மேலும் பார்க்க

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்துள்ளது.கடந்த வாரம் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ. 75,040-க்கு விற்பனையானது. அதன்பிறகு விலை படிப்படிய... மேலும் பார்க்க

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

இந்திய உற்பத்தித் துறை கடந்த ஜூலை மாதத்தில் 16 மாதங்களில் இல்லாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இதுகுறித்து ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:... மேலும் பார்க்க

ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!

புதுதில்லி: உள்நாட்டு வருவாய் அதிகரித்ததன் காரணமாக ஜூலை மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 7.5 சதவிகிதம் அதிகரித்து சுமார் ரூ.1.96 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.2024 ஜூலையில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வ... மேலும் பார்க்க

பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் பங்குகள் 18% சரிவு!

புதுதில்லி: பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிரிஷ் கௌஸ்கி தனது ராஜினாமாவை அறிவித்ததையடுத்து நிறுவனத்தின் பங்குகள் 18% சரிந்தன.பிஎஸ்இ-யில் அதன் பங்கு 18.06 சத... மேலும் பார்க்க

டாடா பவர் லாபம் ரூ.1,262 கோடியாக அதிகரிப்பு!

புதுதில்லி: புதுப்பிக்கத்தக்க மற்றும் பரிமாற்றம் மற்றும் விநியோக வணிகத்திலிருந்து அதிக வருவாய் கிடைத்ததன் காரணமாக, ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 6%-க்கும் மேலாக உயர்ந்து ரூ.1,262... மேலும் பார்க்க