செய்திகள் :

ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் கல்லணைக் கால்வாய் நீரில் மூழ்கி பலி

post image

தஞ்சாவூர் அருகே கல்லணைக் கால்வாயில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.

தஞ்சாவூர் அருகே தெற்கு மானோஜிப்பட்டியை சேர்ந்த பழனி (36). கூலித் தொழிலாளி. இவரது தங்கை மகன் தமிழ்மணி (13). இருவரும் சனிக்கிழமை மாலை மானோஜிப்ட்டி கல்லணைக் கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது தண்ணீரின் வேகம் காரணமாக இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர்.

அப்போது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி பழனி மற்றும் தமிழ்மணி இருவரையும் தேடி பார்த்தனர். இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை தேடும் பணி நடைபெற்றது. வெட்டிக்காடு அருகே ரெகுநாதபுரம் பகுதியில் தமிழ்மணி உடலை அந்த பகுதி மக்கள் மீட்டு ஒரத்தநாடு போலீசாருக்கு தெரிவித்தனர். தொடர்ந்து தமிழ்மணி உடல் அடையாளம் காணப்பட்டு உடல்கூறாய்வுக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், பழனி உடல் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடந்தது. இதில் பொட்டுவாச்சாவடி பகுதியில் செல்லும் கல்லணைக் கால்வாய் ஆற்றுப்பகுதியில் பழனியின் உடலை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டனர்.

பின்னர் பழனியின் உடல் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

Two members of the same family drowned while bathing in the Kallanai canal near Thanjavur.

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வேண்டும் என நினைப்பவா்கள் ஓரணியில் திரள வேண்டும்: ஜி.கே. வாசன்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என நினைப்பவா்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி. கே.வாசன் தெரிவித்தாா்.மதுரை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்த... மேலும் பார்க்க

புளிய மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி, ஓட்டுநர் படுகாயம்

திருத்தணி: திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர். ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.திருத்தணி... மேலும் பார்க்க

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூரை சேர்ந்தவர் விவசாயி சுப்ரமணியன் (53). விவசாயி. இவரது மனைவி ராமாயி (47)... மேலும் பார்க்க

தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்: உதயநிதிஸ்டாலின்

சென்னை: சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் வழியில் தமிழ் மண்ணில் ஆதிக்கத்தையும், அடிமைத்தனத்தையும் வீழ்த்துவோம் என துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து உதயநிதிஸ்டாலின் தன... மேலும் பார்க்க

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

உத்தரப் பிரதேசத்தில் சர்யு கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.உத்தரப் பிரதேச மாநிலம், சிஹாகான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்... மேலும் பார்க்க

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மதுரை: பாஜக வேலையே ஒவ்வொரு கட்சியையும் உறவாடி கொல்வதுதான். விஜயகாந்த் உடன் கூட்டணி வைத்து தேமுதிக கட்சியை அழித்தாா்கள். இதில் கடைசியாக விழப்போவது அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமிதான். விரைவில் அவ... மேலும் பார்க்க